Saturday, February 18, 2017

திராவிட இயக்க பயிற்ச்சிபாசறைக்கான 8 மாவட்ட கழக முப்படைகளின் ஆலோசனை கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி இணைந்து நடத்தும் திராவிட இயக்க பயிற்ச்சி பாசறை, 2017 மார்ச் 4, 5, தேதிகளில் மதுரையில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்விற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று 18.02.2017 சனிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள, தமிழ்நாடுஹோட்டலில் நடைபெற்றது!

இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி, மாநில அமைப்பாளர்கள், மாநில துணை அமைப்பாளர்கள், மதுரை மாநகர், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்ட கழக இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியை ஆரம்பித்துவைத்து கழகத்தின் அரசியல் ஆய்வுமையச்செயலாளர் அண்ணன் மு.செந்திலதிபன் அவர்கள் உரைமுழக்கம் நிகழ்த்தினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment