Sunday, February 12, 2017

கவிஞர் குடியரசு படத்திற்கு மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுகவினர் மலரஞ்சலி!

தத்துவக் கவிஞர் குடியரசு அவர்களின் நினைவுநாளையொட்டி அரவது திருஉருவப் படத்திற்கு கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில் இன்று 12-02-2017, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தத்துவக் கவிஞர் குடியரசு அவர்களின் புதல்வரும், கழகத்தின் அரசியல் ஆய்வு மைய உறுப்பினருமான இசைவாணன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், ப.சுப்பிரமணி மற்றும் மல்லிகா தயாளன் உள்ளிட்ட கழக முன்னணியினர் கலந்துகொண்டு தத்துவக் கவிஞர் குடியரசு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment