Sunday, February 19, 2017

ஈரோடு ஒன்றிய செயலாளர் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

ஈரோடு ஒன்றிய கழகத்தின் செயலாளரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களம் கண்டவருமாகிய ஆருயிர் அண்ணன் முருகன் அவர்களின் அருமை புதல்வன் சந்துரு மற்றும் நந்தினி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று 19-02-2017 மாலையில், ஈரோடு ஆர்.என்.புரத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த வரவேற்ப்பு நிகழ்வில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாலை எடுத்துக்கொடுத்து மணமக்களை மாலை மாற்ற செய்து வாழ்த்தினார். உடன் கழக முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் கழக கண்மணிகள், உறவினர்கள் என ஏராளமானோர் வாழ்த்தினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment