Tuesday, July 4, 2017

உதவியாளர் செ.திவான் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

நெல்லை லாரா விடுதி மே பிளவர் அரங்கத்தில் வரலாற்று ஆய்வாளார் வைகோ அவர்களின், மூத்த உதவியாளர் செ.திவான் அவர்களின் மகள் டாக்டர் சுஹைனா - பொறியாளர் ந.அகமத் அனஸ் திருமணம் சிறப்பாக நேற்று 03-07-2017 நடந்தது. 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மிகுந்த நெகிழ்ச்சியுடன் வாழ்த்தினார். நீதியரசர் எஸ்.ரத்தினவேல் பாண்டியனுக்கு அடுத்து ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட செயலாளராக வரலாறு படைத்த மூத்த வழக்கறிஞர் எம்.பி. அழகிய நம்பி, சமுதாயப் பெரியவர்கள் வாழ்த்தினர். 

தொடக்கத்தில் நெல்லை அபுபக்கர் சிறப்பாகப் பேசி பாடினார். பிளக்ஸ், போஸ்டர் அழைப்பிதழ் எதுவும் இல்லாமல் எளிமையாக நடந்தது இந்த முன் மாதிரி திருமணம்.

மணமக்களை கலந்துகொண்ட மதிமுக நிர்வாகிகள், கண்மணிகள், குடும்ப உறவுகள் அனைவரும் வாழ்த்தினார்கள்.


தகவல்: திமு ராசேந்திரன்

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment