Wednesday, July 12, 2017

சம்பத் சந்திரா-க்கு அஞ்சலி செலுத்தினார் வைகோ!

மதிமுகவின் குமரி மாவட்ட தளபதி வழக்கறிஞர் சம்பத் சந்திரா அவர்கள் 10-07-2017 அன்று காலை 11 மணி அளவில் உடல் நல குறைவால் மரணமடைந்தார்.

சம்பத் சந்திரா அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராகவும், மதிமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராகவும், குருந்தன்கோடு ஒன்றிய செயலாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் அவரது உடலுக்கு 11-07-2007 காலை 9 மணி அளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மற்றும் மதிமுக முன்னணி தலைவர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment