Wednesday, May 12, 2021

கொரோனா மருத்துவம்; ம.தி.மு.க. சார்பில் ரூபாய் பத்து இலட்சம் நிதி!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று தமிழக முதல்வருக்கு எழுதி உள்ள கடிதம்:

கொரோனா பெருந்தொற்று நோய் ஏற்படுத்தி இருக்கின்ற பாதிப்புகளை எதிர்கொள்ள, தமிழ்நாடு அரசு மேற்கொள்கின்ற மக்கள் நல்வாழ்வு மருத்துவப் பணிகளுக்கு, தாராளமாக நிதி வழங்குமாறு தாங்கள் விடுத்து இருக்கின்ற அழைப்பை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,  ரூ 10,00,000 ( ரூபாய் பத்து இலட்சம்) நிதி வழங்குகின்றோம். அதற்கான காசு ஓலையை, இத்துடன் இணைத்து இருக்கின்றேன். கனரா வங்கி, தேனாம்பேட்டை கிளை, காசு ஓலை எண். 614331/12.05.2021

இவ்வாறு,வைகோ தமது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். 

காசு ஓலையை, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கு. சின்னப்பா அவர்கள், தலைமைச் செயலகத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதித்துறை) திரு கிருஷ்ணன் அவர்களிடம் இன்று பகல் ஒரு மணி அளவில், நேரில் வழங்கினார். 

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
12.05.2021

No comments:

Post a Comment