Sunday, May 30, 2021

ஆ. இராசா வாழ்விணையர் மறைவு. வைகோ MP இரங்கல்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் ஆ.இராசா அவர்களின் வாழ்விணையர் திருமதி பரமேசுவரி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். திராவிட இயக்கத்தின் ஈடற்ற தளகர்த்தராக ஆ.இராசா அவர்கள் பொது வாழ்வில் சிகரங்களை எட்டுவதற்கு காரணமாக இருந்த இணையரை இழந்து இருக்கிறார்.

அரசியலில் சோதனைகள், வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் அனைத்திலும் ஆ.இராசா அவர்களுக்கு தோன்றாத் துணையாக இருந்த அவரது வாழ்விணையர் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

மனைவியை இழந்து கண்ணீர் கடலில் தவிக்கும் ஆ.இராசா அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
29.05.2021

No comments:

Post a Comment