Sunday, May 16, 2021

மதிமுக வழக்குஉரைஞர் வேல்முருகன் மறைவு! வைகோ MP இரங்கல்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் செங்கல்பட்டு மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கு உரைஞர் சு. வேல்முருகன் அவர்கள், தன்னலம் இன்றி கழகத்திற்கு அரும்பாடுபட்டு உழைத்து வந்தார். எத்தகைய பணிகள் இருந்தாலும், சிரித்த முகத்தோடு செய்து முடிப்பார்.
விமான நிலையத்திற்கு நான் வரும்போதெல்லாம் வரவேற்க வருவார். மாவட்டத்தில் வழக்கு உரைஞர்கள் ஆற்ற வேண்டிய பணிகளை, தானே எடுத்துச் செய்வார்.
அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிரமப்படுகின்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன், நான் தொடர்பு கொண்டு, நேற்று இரவு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து விட்டேன். ஆனால் பயன் இன்றி, இன்று காலையில் அவர் உயிர் இழந்தார் என்ற செய்தி, பேரிடியாய்த் தலையில் விழுந்தது. நான் நிலைகுலைந்து போனேன்.
அவரது மறைவு, கழகத்திற்கு, ஈடுசெய்ய முடியாத இழப்பு. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அவரது துணைவியாருக்கும், அந்தக் குடும்பத்திற்கும், எந்தவிதத்திலும் ஆறுதலோ தேறுதலோ சொல்ல முடியாது. தாங்க முடியாத துயரத்துடன், வேல்முருகன் மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கொரோனா இரண்டாவது அலை, இளைய வயதினரையும் தாக்கி உயிரைக் குடிக்கின்றது. எனவே, அனைத்துத் தரப்பினரும், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசு விதித்து இருக்கின்ற கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு, கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
15.05.2021

No comments:

Post a Comment