Wednesday, February 28, 2018

முன்னாள் நீதியரசர் திரு.ரத்தினவேல் பாண்டியன் மறைந்தார்-வைகோ கண்ணீர் அஞ்சலி!

முன்னாள் நீதியரசர் திரு.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் 28-02-2018 காலை 11 மணி அளவில் மறைந்தார் என்ற செய்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு கிடைத்ததும், உடனே வைகோ உள்ளிட்ட கழக முன்னணியினர் அண்ணாநகர் A.B. பிளாக் 5வது தெருவில், KHM ஆஸ்பிடலுக்கு பின்னாடி உள்ள அவரது இல்லத்தில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

ஒமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

தலித் குடும்பத்தினர் மீது கொடூரத் தாக்குதல் - வைகோ கண்டனம்!

விழுப்புரம் மாவட்டம் - திருக்கோவிலூர் அருகே உள்ள வேலம்புத்தூர் கிராமத்தில், ஆராயி என்பவரது வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அவரையும், அவரது மகள் தனம் என்ற 14 வயதுச் சிறுமியும் வன்புணர்வு செய்து, ஆராயியை வெட்டிக் கொன்றுள்ளனர்; எட்டு வயதுச் சிறுவன் தமயனை கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர்; இரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமி தனம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த இக்குடும்பத்தினர் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இத்தகைய கொடூரத் தாக்குதல், 21 ஆம் நூற்றாண்டில், நாகரிக சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோமா? என்ற ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக அரங்கில் தமிழகத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது.

ஆராயி நிலத்தில் 12 சென்ட் தனக்கு விற்குமாறு ஒருவர் கேட்டதற்கு ஆராயி மறுத்து விட்டதால், இந்த கொடூரக் கொலையும், பாலியல் கொடுமையும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.

இக்கொடூர நிகழ்வு நடந்து ஒரு வாரம் ஆகியும் இதுவரையில் காவல்துறை எவரையும் கைது செய்யவில்லை. சிறுவன் இறந்ததை முதலில் சந்தேக மரணம் என்று பதிவு செய்துள்ளது. ஊர் மக்கள், உறவினர்கள் எதிர்ப்பு காரணமாக பின்னர் கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.

குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையில் காவல்துறையினர் செயல்படுவது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் தலித் மக்கள் மீது நடந்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்கள் வேதனை அளிக்கின்றன. படுகொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்; சாதி வன்முறைகளைத் தடுத்து நிறுத்துகின்ற வகையில், தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 28-02-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, February 27, 2018

தமிழக மருத்துவ மாணவர்கள் மர்ம மரணம், சிபிஐ விசாரணை தேவை-வைகோ கோரிக்கை!

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்ற மருத்துவக் கல்லூரி மாணவர், சண்டிகரில் உள்ள மத்திய அரசு மருத்துவ ஆராய்ச்சிக் கல்லூரியில், உயர்கல்வி படித்துக் கொண்டு இருந்த நிலையில், 2018 பிப்ரவரி 27 அதிகாலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து, மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர்வைகோ, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நட்டா அவர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.


அன்பிற்குரிய ராஜ்நாத் சிங் அவர்களே, 
வணக்கம். அதிர்ச்சி தருகின்ற ஒரு துயர நிகழ்வினை, இக்கடிதத்தின் வாயிலாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.


தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்ற மாணவர், தகுதி அடிப்படையில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்து, மத்திய அரசின் உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில், சண்டிகரில் உள்ள அறுவை மருத்துவத்தில் மேல்படிப்பு பயில, தகுதி அடிப்படையில் இடம் பெற்று, கடந்த ஆறு மாதங்களாகப் படித்து வந்தார்.

2018 பிப்ரவரி 26 காலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்ற செய்தி அறிந்து, அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாயினர்.

இறந்துபோன கிருஷ்ண பிரசாத், ஒரு வாரத்திற்கு முன்னர் தனது பெற்றோரிடம், இந்தி மொழியில் பேசுவது சற்றுச் சிரமமாக இருக்கின்றது என்று கூறி இருக்கின்றார். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்கள், தில்லியில் மருத்துவ உயர்கல்வி வகுப்பில் சேர்ந்த சில நாள்களில் மர்மமான முறையில் மரணம் அடைந்த விபரீதத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

2016 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்ற மாணவர், தகுதி அடிப்படையில் எம்பிபிஎஸ் படித்து முடித்து, அதே தகுதியில் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மருத்துவ மேல்படிப்புக்குச் சேர்ந்த பத்தாம் நாள், அவர் தங்கி இருந்த அறையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடல் பரிசோதனையில், அவரது வலது கை தமனி நரம்பில் தடித்த ஊசி கொண்டு, வென்~பிளான் எனும் நஞ்சு செலுத்தப்பட்டதால் அவர் உயிர் இழந்தார் என்று தெரிவித்தது. சரவணன் இடது கை பழக்கம் உடையவர் அல்ல. எனவே, வலது கை தமனி நரம்பில், அவராகவே அந்த ஊசியைச் செலுத்த வாய்ப்பு இல்லை என்று மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றார்கள். அவர் தங்கி இருந்த அறையில் ரத்தத் துளிகள் தரையில் சிந்தி இருந்தன. காலி பாட்டில்கள் எதுவும் காணப்படவில்லை. வலுக்கட்டாயமாக அவரது கையில் ஊசி மூலம் நஞ்சு செலுத்திக் கொல்லப்பட்டார் என்பதை ஊகிக்க முடிகின்றது.

தில்லி மருத்துவக் கல்லூரிகளில் மேல்படிப்புக்கு இடம் கிடைக்காதவர்களால் இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்; அதன் மூலம் அந்த வகுப்பில் காலியாகும் இடத்தை வேறு ஒருவர் கைப்பற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

2018 ஜனவரி மாதம், இதேபோல அதிர்ச்சிதரத்தக்க மரணம் தில்லியில் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத் பிரபு என்ற மாணவர், தகுதி அடிப்படையில் எம்பிபிஎஸ் படித்து முடித்து தில்லி தில்ஷாத் கார்டனில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்று வந்தார். ஜனவரி17 ஆம் தேதி காலையில் கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சரவணன் மரணத்தில், எந்தவிதமான முறையில் அவர் சாகடிக்கப்பட்டாரோ, அதே முறைதான் சரத் பிரபு மரணத்திலும் மேற்கொள்ளப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இந்தப் பின்னணியில், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கிருஷ்ண பிரபு மரணமும், இயற்கையாக நடைபெறவில்லை; அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது தெளிவாகின்றது.
தில்லியில் மருத்துவ உயர்கல்வி கற்கின்ற தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து, தமிழக மக்களிடம் அச்சமும், கவலையும் ஏற்பட்டு இருக்கின்றது.

எனவே, மேலே குறிப்பிட்ட மூன்று மாணவர்களின் மரணம் குறித்தும், மத்திய குற்றப் புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொள்ள தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் எனது கோரிக்கை நீங்கள் செயல்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.

நன்றி,
தங்கள் அன்புள்ள,
வைகோ


Dear Shri Rajnath Singh ji
Vanakkam. I would bring to your kind notice, a matter of grave concern, regarding the death of Krishna Prasad in the Union Territory of Chandigarh, under myseterious circumstances. On 26th February 2018, 5.00 a.m., who was studying post-graduate medical course first year Master of Surgery in Postgraduate Institute of Medical Education and Research, Chandigarh.
He was admitted in that institute six months back. His parents and family members were terribly shocked to hear the tragic demise of Krishna Prasad.
A week back, the deceased Krishna Prasad told his parents that he faced some difficulties because of his inability to speak Hindi.
I am pained to point out two previous mysterious deaths of students of Tamilnadu, who got admitted for Post-graduate medical study in Delhi.
In July 2016, Mr Saravanan of Tiruppur District in Tamilnadu, who completed his MBBS on merit and got admitted in the All India Institute of Medical Sciences, to study Doctor of Medicine, Post graduate course. On July 10th, he was found dead in his room. In his right hand vein, venflon was injected, which took his life.
He is not a left hander. Therefore, there is no possibility of injecting himself as per the version of medical experts.
It was found on the floor drops of blood. No empty bottle was found. It could be clearly presumed that he was forcefully injected with the poisonous medicine and killed.
Medical experts draw an inference that those who could not admission in the post graduate course might have killed Saravanan, so that a vacancy would arise, which could be utilised to get admission. Another shocking incident took place in January 2018, this year. One medical student Mr. Sarath Prabu of Tiruppur District, Tamilnadu who finished his MBBS course on merit in Tamilnadu, got admission, to study general medicine post-graduate course in the University of Medical Sciences, Dilshad Garden, Delhi.
On 17th January 2018 morning, he was found dead in the toilet under mysterious circumstances. The same modus operandi, which was adopted for the death of Saravanan, was adopted in this tragic death of Sarath Prabu.
In this background, now, another shocking news of sudden demise of Mr. Krishna Prasad, hailing from Rameshwaram in Tamilnadu, who completed his MBBS on merit, admitted to study Post-graduate course in the PGIMER Medical College in Chandigarh, causes shock and suspicion.
I strongly believe that he might have been killed, as it happened in the above mentioned previous mysterious deaths.
Now, I understand Post-mortem has been conducted on the body of Krishna Prasad. There is every possibility to influence the cocerned authorities in the Medical institute.
Heavy apprehension is prevailing in the minds of the people of Tamilnadu about the security of students of Tamilnadu, who are studying in the Medical colleges of Delhi.
Therefore, I would request you to initiate CBI enquiry on these three mysterious deaths.
Therefore I do hope that you would order CBI inquiry for which I shall highly obliged to you.
With regards,
Yours sincerely,
(Vaiko)
Hon’ble Rajnath Singh,
Minister of Home,
Government of India,
Room No 104, North Block,
Central Secretariat , 
New Delhi-110001

Dear Shri Jagat Prakash Nadda ji

Vanakkam. I would bring to your kind notice, a matter of grave concern, regarding the death of Krishna Prasad in the Union Territory of Chandigarh, under myseterious circumstances. On 26th February 2018, 5.00 a.m., who was studying post-graduate medical course first year Master of Surgery in Postgraduate Institute of Medical Education and Research, Chandigarh.
He was admitted in that institute six months back. His parents and family members were terribly shocked to hear the tragic demise of Krishna Prasad.
A week back, the deceased Krishna Prasad told his parents that he faced some difficulties because of his inability to speak Hindi.
I am pained to point out two previous mysterious deaths of students of Tamilnadu, who got admitted for Post-graduate medical study in Delhi.
In July 2016, Mr Saravanan of Tiruppur District in Tamilnadu, who completed his MBBS on merit and got admitted in the All India Institute of Medical Sciences, to study Doctor of Medicine, Post graduate course. On July 10th, he was found dead in his room. In his right hand vein, venflon was injected, which took his life.
He is not a left hander. Therefore, there is no possibility of injecting himself as per the version of medical experts.
It was found on the floor drops of blood. No empty bottle was found. It could be clearly presumed that he was forcefully injected with the poisonous medicine and killed.
Medical experts draw an inference that those who could not admission in the post graduate course might have killed Saravanan, so that a vacancy would arise, which could be utilised to get admission. Another shocking incident took place in January 2018, this year. One medical student Mr. Sarath Prabu of Tiruppur District, Tamilnadu who finished his MBBS course on merit in Tamilnadu, got admission, to study general medicine post-graduate course in the University of Medical Sciences, Dilshad Garden, Delhi.
On 17th January 2018 morning, he was found dead in the toilet under mysterious circumstances. The same modus operandi, which was adopted for the death of Saravanan, was adopted in this tragic death of Sarath Prabu.
In this background, now, another shocking news of sudden demise of Mr. Krishna Prasad, hailing from Rameshwaram in Tamilnadu, who completed his MBBS on merit, admitted to study Post-graduate course in the PGIMER Medical College in Chandigarh, causes shock and suspicion.
I strongly believe that he might have been killed, as it happened in the above mentioned previous mysterious deaths.
Now, I understand Post-mortem has been conducted on the body of Krishna Prasad. There is every possibility to influence the cocerned authorities in the Medical institute.
Heavy apprehension is prevailing in the minds of the people of Tamilnadu about the security of students of Tamilnadu, who are studying in the Medical colleges of Delhi.
Therefore, I would request you to initiate CBI enquiry on these three mysterious deaths.
Therefore I do hope that you would order CBI inquiry for which I shall highly obliged to you.
With regards,
Yours sincerely,
(Vaiko)
Hon’ble Jagat Prakash Nadda,
Minister of Health & Family Welfare,
Government of India,
Room No. 348A, Nirman Bhawan,
C-Wing, New Delhi-110001


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

அமைப்பாய் திரள்வோம் நூல் வெளியீட்டில் வைகோ!

சென்னையில் 26-02-2018 அன்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் எழுதிய அமைப்பாய் திரள்வோம் நூல் வெளியீட்டு விழா நடந்தது.

இதில் திராவிட கழக தலைவர் வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக அன்பழகன், தோழர் நல்லகண்ணு, மநேமக ஜவாஹிருல்லா, நக்கீரன் கோபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

இதில் வைகோ பேசும்போது, இந்த நூல் காலத்தின் கட்டாயம் என பேசினார். இதில் ஏராளமான மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, February 26, 2018

தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக வடமொழிப் பாடல் மத்திய அரசின் ஐஐடி அக்கிரமம்-வைகோ கடும் கண்டனம்!

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைக் காஞ்சி மடாதிபதி அவமதித்ததால் தமிழர்களின் மனதில் ஏற்பட்ட புண் ஆறுவதற்கு உள்ளாக, அந்தப் புண்ணில் சூட்டுக்கோல் திணிப்பதைப் போல இன்று 26.2.2018, சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரியும், பொன் இராதாகிருஷ்ணனும் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தே பாடாமல், ‘ஓம் கணபதி’ என்று தொடங்கும் மதப் பாடலை வடமொழியில் பாடியுள்ளனர்.

பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழிகள் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தின் மேலாண்மையைத் திணிப்பதற்கு, சங் பரிவார் வகுக்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் அரசாக, மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு அக்கிரமம் செய்து வருகின்றது. அதற்காக, அனைத்துத் துறைகளிலும் இந்தியைத் திணித்து, செத்துப் போன வடமொழியான சமற்கிருதத்திற்கு மகுடம் சூட்டும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு இருக்கின்றது. அதன் ஒரு கட்டம்தான், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக வடமொழிப் பாடலைப் பாடியதாகும்.

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தழைத்துச் செழித்த உலகத்தின் தொன்மையான செவ்வியல் மொழியான தமிழை, தமிழ்த்தாய் வணக்கத்தைப் புறக்கணித்து அவமதிக்கும் துணிச்சல் ஐஐடிக்கு எப்படி ஏற்பட்டது? மத்திய அரசின் வடமொழித் திணிப்பு வெறியும், ஆணவமும், அகம்பாவமும், திமிரும்தான் இதற்குக் காரணம்.

ஐஐடி நிகழ்வு, தமிழர்களின் தன்மானத்திற்கும், தமிழ் மொழியின் மாண்புக்கும் விடப்பட்ட அறைகூவல் ஆகும். தமிழகத்தின் தலைநகரிலேயே தமிழைப் புறக்கணித்து, வடமொழிப் பாடலைத் திணித்தது எவ்விதத்திலும் மன்னிக்கக்கூடியது அல்ல. இதற்குப் பொறுப்பான ஐஐடி நிர்வாகிகளுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

அண்மைக்காலமாக சென்னை வானொலியில் ஒலிபரப்பாகின்ற தமிழ்ப்பாடல்களுக்கு இடையே, மத்திய அரசு விளம்பரங்களை இந்தி மொழியில் மட்டுமே சொல்கின்றார்கள். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திற்கும், இந்தி மற்றும் வடமொழிப் பெயர்களையே சூட்டி வருகின்றார்கள்.

100 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் சமஸ்கிருதத்தைப் படித்தால்தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலை இருந்தது. அந்த அநீதியை, நீதிக்கட்சி அரசு ஒழித்துக்கட்டி, தமிழுக்கு உரிய இடம் தந்தது.

இருபதாம் நூற்றாண்டில் முற்பகுதியில் தமிழகத்தில் இந்தி மற்றும் வடமொழி ஆதிக்கத்தை எதிர்த்து மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, திரு வி.க., தேவநேயப் பாவாணர், மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார், பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் எதிர்த்துப் போராடினர்.

இந்தி எதிர்ப்பு அறப்போரில், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் எண்ணற்ற தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு, எட்டுத் தமிழ் இளைஞர்கள் தீக்குளித்த மடிந்த தியாக பூமியான தமிழ்நாட்டில், இந்தியை, வடமொழியைத் திணிக்க முற்படுகின்ற மத்திய அரசை எதிர்த்துப் பலமுனைகளிலும் கிளர்ச்சி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பது என்பதைப் போல, நம் உச்சந்தலையிலேயே ஏறி மிதிக்கலாம் என்ற இந்துத்துவ வெறிப்போக்குக்கு எதிராக தன்மானத் தமிழர்கள் அனைவரும் வெகுண்டு எழ வேண்டிய நேரம் இது.

உறங்கும் புலியை இடற வேண்டாம் என மத்திய அரசை எச்சரிக்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 26-02-2018 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

கோவை நண்பர் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

இன்று 26.02.2018 காலை கோவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், தனது நண்பர் ஸ்ரீதரன் அவர்கள் இல்லத் திருமணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

உடன் கோவை மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

முடங்கிக் கிடக்கின்ற அறிவியல் தமிழ் மன்றத்தை இயக்கிடுக! வைகோ அறிக்கை!

உலகம் முழுவதும் கணினி, இணையம் வழியிலான தகவல் தொடர்புகள் விரிவு அடைந்து கொண்டே போகின்றன. பல்வேறு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அறிமுகம் ஆகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அதற்கு ஏற்ற வகையில், அறிவியல் தமிழ் வளரவில்லை.

ஜப்பான் நாட்டில் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும், அயல்நாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை ஜப்பானுக்குள் கொண்டு வந்து விற்பதாக இருந்தாலும், முதலில் அதற்கான விளக்கங்களை ஜப்பானிய மொழியில் அச்சிட்டுத் தர வேண்டும். அங்கே அனைத்து நிலைகளிலும் ஜப்பானிய மொழியே கோலோச்சுகின்றது. அதுபோலவே, சீனா, கொரியா ஆகிய நாடுகளிலும் தாய்மொழியிலேயே அறிவியலைப் பயில்கின்றார்கள்.

அதுபோல, அறிவியல் தமிழை வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக ஆகி இருக்கின்றது.

அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் 2006 ஆம் ஆண்டில் ‘அறிவியல் தமிழ் மன்றம்’ அமைக்கப்பட்டது.

இந்த அமைப்பின் முதல் தலைவராக மணவை முஸ்தபா நியமிக்கப்பட்டார். துணைத்தலைவராக பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியம், உறுப்பினர், செயலராகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறைச் செயலாளர் கற்பூர சுந்தர பாண்டியன் மற்றும் உறுப்பினர்களாக, ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், டாக்டர் காந்தராஜ், சாரதா நம்பி ஆரூரன், டாக்டர் சாமுவேல் ரைட் ஆகியோர்நியமிக்கப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டில் மணவை முஸ்தபா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாகப் பதவியில் இருந்து விலகிக் கொள்ள விரும்பிய நிலையில், அப்பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு, கவிஞர் கா. வேழவேந்தன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு இம்மன்றம் செயல்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது.

கணினி, இணையம் வழியிலான தகவல் தொடர்பில் பல்வேறு புதிய ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு இணையான நல்ல தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும். தகவல் தொழில் நுட்பத்தினைத் தமிழ் மொழியிலேயே படித்துத் தெரிந்து கொள்வதற்கு ஏற்ற பல்வேறு அறிவியல் தமிழ் நூல்கள் வெளியிட வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளிலான உயர்கல்வியில் தமிழ் மொழிப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அறிவியல் பயன்பாட்டில் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இச்சூழலில் அனைத்து வகையான அறிவியல் தமிழ் தொடர்பான பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டி இருக்கின்றது.

இனி தமிழில் மாதந்தோறும் 1000 புதிய சொற்கள் சேர்க்கப்படும் என்று, சில மாதங்களுக்கு முன்பு தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். ஆனால், அறிவியல் தமிழ் தொடர்ந்து தேக்க நிலையில் இருந்து வருகின்றது. துறைசார் இதழ்கள், ஆய்வு ஏடுகள் தமிழில் கிடைக்காத நிலையே இருக்கின்றது. இலக்கியத்தில், சமயத்தில், அரசியலில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது போன்று, இதர துறைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது இல்லை என்ற குறைபாடும் இருக்கின்றது.

இந்த நிலையினைப் போக்கிட, முடங்கிக் கிடக்கின்ற அறிவியல் தமிழ் மன்றத்தினை மீண்டும் இயங்கிடச் செய்ய வேண்டும்; அதன் வழியாக அறிவியல் தமிழை வளர்த்திடத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 26-02-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

நீதியரசர் இரத்தினவேல்பாண்டியன் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

நீதியரசர் இரத்தினவேல்பாண்டியன் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் இரத்தினவேல்பாண்டியன் அவர்களின் இல்லத் திருமண நிகழ்வு நேற்று 27-02-2018 நடந்தது.

இந்த மணவிழா நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Sunday, February 25, 2018

காஞ்சி பாலேஸ்வரத்தில் பிணக்குவியல்-வைகோ அறிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்கின்ற தனியாருக்குச் சொந்தமான தொண்டு நிறுவனம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. ஆதரவு அற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தங்க வைத்து இருக்கின்றனர். அவர்களைக் கடுமையான சித்திரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகின்றனர். ஒருமுறை உள்ளே சென்று விட்டால் பின்பு வெளி உலகத்தைக் காணவே முடியாது என்ற நிலைமை இருக்கின்றது.

சேவை மனப்பான்மையுடன் துவங்கிய இந்த மையம், இப்போது வணிக நோக்கத்தில் செயல்படுகின்றது என்ற புகார்களின் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணையின் பேரில் சமூகநலம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று கள ஆய்வு செய்தனர். மருத்துவ ஆவணங்கள், முறையான சான்றிதழ்கள் இல்லாமல், இறந்த உடல்களை அடக்கம் செய்யாமல், பாதாள பிண அறையில் போட்டு வைத்து இருப்பதைப் பார்த்து எச்சரித்துள்ளனர்.

2017 செப்டம்பருக்குப் பின்னால் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கி வருவதை, அப்பகுதி சமூகச் செயல்பாட்டாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் தகவல் தெரிவித்து வந்தனர்.

கடந்த 20.02.2018 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11 மணி அளவில் தாம்பரத்தில் இருந்து திருமுக்கூடல் வழியாக பாலேஸ்வரத்திற்கு வந்துகொண்டு இருந்த, தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான போலி ஆம்புலென்ஸ் வாகனத்தில், திருவள்ளூர் மாவட்டம், கூவாகம் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள் என்ற மூதாட்டி, ‘அய்யய்யோ என்னைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று கத்திக்கொண்டே சென்றதைப் பார்த்து, அந்த வழியாக இருசக்கர மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் பிரபு துணிச்சலாகச் செயல்பட்டு வாகனத்தை இடைமறித்து விசாரித்தபோது, ஓட்டுநர் ராஜேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தகராறு செய்துள்ளார்.

இதைக் கவனித்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வாகனத்தின் உள்ளே இருந்த மூதாட்டியைக் காப்பாற்ற முயற்சித்தபோது பேரதிர்ச்சி அடைந்தனர். அங்கே, சுயநினைவில்லாத திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் செல்வராஜ் என்பவரும், அவருக்கு அருகில் ஒரு சடலம் துணியால் சுற்றி வைக்கப்பட்டு, காய்கறி, அரிசி மூட்டைகள் எந்த ஆவணமும் இல்லாமல் கடத்தப்படுவதை அறிந்த பொதுமக்கள் சாலவாக்கம் காவல்நிலையத்திற்குத் தகவல் கூறிக் காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. இதைப் பார்த்த மக்கள் அச்சத்துடன் சாலவாக்கம் காவல்நிலையம் முன் திரண்டு, தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் குரல் கொடுத்தனர்.

ஆனால் காவல்துறை, குற்றம் செய்தவர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, நியாயம் கேட்டுப் போராடிய மக்கள் மீது அதிகபட்சமாக வன்முறை பிரயோகம் செய்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர். பிரச்சினையைத் திசைதிருப்ப, வழக்கமாகப் பின்பற்றும் வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர். தொண்டு நிறுவனத்தின் ஆம்புலென்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது என்று கூறி, குரும்பிறை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற அப்பாவி இளைஞரைக் காவல் நிலையத்தில் பிடித்து வைத்தனர்.

இதை அறிந்து, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மதிமுக அவைத் தலைவரும், சிறந்த சமூக செயல்பாட்டாளருமான ஜி.கருணாகரன், சாலவாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக தொண்டர் அணி துணை அமைப்பாளருமான தாஸ் ஆகியோர் காவல்நிலையம் சென்று, தங்கள் கிராமத்து இளைஞனை விடுவிக்கக் கோரினர்.

ஆனால் காவல்துறை அதிகாரி அவர்களைத் தரக்குறைவாகப் பேசி அவமதித்ததோடு, அவர்களது அலைபேசிகளைப் பறித்துள்ளார்; யாருக்கும் தகவல் தெரிவிக்க விடாமல், நடுநிசி வேளையில் மூவரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, செங்கல்பட்டு டவுன் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று மனிதாபிமானமற்ற முறையில், இந்தியத் தண்டனைச் சட்டம் 147, 148, 341, 294(பி), 506(1), டி.பி.பி.3(1), ஆகிய பிரிவுகளில் பொய் வழக்குப் போட்டு, 21.02.2018 அன்று உத்திரமேரூர் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் செங்கல்பட்டு சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.

இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தவர்கள் மீது வழக்குப் போட்டுச் சிறையில் அடைத்து இருப்பது உரிமை மீறல் ஆகும்.

பாலேஸ்வரம் கிராமம் ஒரு மர்மப் பிரதேசமாக, மரண வியாபாரத்தின் பரிசோதனைக் கூடமாக இருக்கின்றது. கடந்த ஏழு ஆண்டுகளில் 1590 உடல்கள் இங்கே உள்ள பாதாள பிண அறையில் போடப்பட்டு உள்ளதாக சம்பந்தப்பட்ட நிர்வாகி தாமஸ் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இறந்தவர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். மரணத்திற்குப் பின்னர் அவர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்ககம் செய்யப்படாமல், பாதாள அறையில் பிணக்குவியல்களை வைத்து மூடுவதால், காற்று மாசு அடைந்து சுற்றுச் சூழல் பாதித்து நோய்கள் உருவாகக் காரணமாகி, சுகாதாரச் சீர்கேடு உருவாகின்றது. இறந்தவர்களின் உடல் உறுப்புகள் விற்கப்படுவதாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

எனவே, தமிழக அரசு பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு, பாதாள அறையைத் திறந்து, சோதனை செய்ய வேண்டும்; பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 25-02-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, February 23, 2018

அதிமுக செய்தி தொடர்பாளர் புதுக்கோட்டை செல்வம் மதிமுகவில் இணைந்தார்!

தூத்துக்குடி மாவட்டம் - புதுக்கோட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் புதுக்கோட்டை செல்வம் அவர்கள் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை தாயகத்தில் 22-02-2018 அன்று சந்தித்து, பொன்னாடை அணிவித்து கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், விவசாய அணி மாநிலச் செயலாளர் ஆடுதுறை இரா.முருகன், சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளர் முராத் புஹாரி, தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன், வடசென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.சி.இராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

காவிரி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகள்!

காவிரி நீர் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் நேற்று 22-02-2018 அன்று கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதில் பேசியதாவது,

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களே,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, 
மதிப்புமிக்க அரசியல் கட்சிகளின் தலைவர்களே, 
விவசாய சங்கங்களின் தலைவர்களே, 
வணக்கம்.


ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தின் காவிரி தீரத்தை, வளம் கொழிக்கும் இயற்கைச் செல்வமாக, ஆசியக் கண்டத்தின் நெற்களஞ்சியமாக ஆக்கிய நமது காவிரி நதியின் உரிமையைப் பறித்து, தஞ்சை மண்டலத்தைப் பஞ்சப் பிரதேசம் ஆக்கும் வகையில்,

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவ ராய், கன்வில்கர் அமர்வு, 2018 பிப்ரவரி 16 ஆம் நாள், தமிழகத்திற்குக் கேடு விளைவிக்கும் ஓர வஞ்சகமான அநீதியான தீர்ப்பை வழங்கி இருக்கின்றது.

தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக ஆக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல் அமைச்சர் ஏற்பாடு செய்து இருப்பதை மனதார வரவேற்கின்றேன்.

126 ஆண்டுகளாக பேசப்பட்டு வருகின்ற பிரச்சினையில்,
1892 பின்னர் 1924 ஒப்பந்தங்கள்,
74 ல் கர்நாடகம் மேற்கொண்ட அநீதியான போக்கு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு,
1990 ஜூன் 2 ல் மத்திய அரசு அமைத்த காவிரி நடுவர் மன்றம்,
91 ஜூன் 25 ல் 205 டிஎம்சி என இடைக்கால ஆணை,
அதனைச் செல்லாது என்று ஜூலை 25 ல் கர்நாடகம் கொண்டு வந்த அவசரச் சட்டம், அதனை ரத்து செய்த உச்சநீதிமன்றம்,
2007 பிப்ரவரி 5 ல் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, அதில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி;
சுற்றுச் சூழலுக்கு 10 டிஎம்சி; கடலில் விழுந்து ஆவியாதல் 4 டிஎம்சி; புதுவைக்கு 7 டிஎம்சி கழித்து, தமிழகத்திற்குக் கிடைப்பது வெறும் 171 டிஎம்சிதான்.
இந்நிலையில் இப்போது வந்திருக்கும் தீர்ப்பில்
முன்பு கொடுத்ததும் பறிக்கப்பட்டு விட்டது.
இப்போது அதிலும் 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டு விட்டதால், கிடைத்து இருப்பது வெறும் 156.25 டிஎம்சிதான்.
இது கர்நாடகத்தின் கோரிக்கை.
அதனைத்தான் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, மத்திய அரசு,
2013 பிப்ரவரி 19 இல், அரசு இதழில் வெளியிட்டது.
மார்ச் 19 ல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

மே 10 ஆம் நாள், கர்நாடகம் சார்பாக வாதாடிய பாலி நாரிமன், தந்திரமாக, மேலாண்மை வாரியம் அமைக்க நாள் ஆகும்; ஒரு மேற்பார்வைக்குழு அமைத்துக் கொள்ளலாம் என்ற தமிழ்நாட்டுக்குப் பாதகமான கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை.

இத்தனை ஆண்டுகளாக நாம் கண்ட காட்சி, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகம் நமக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை.

நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகம் 11 இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கர்தான் பாசனம் செய்ய வேண்டும் என்றது; இறுதித் தீர்ப்பில் அதை 18 இலட்சம் ஏக்கராக உயர்த்தியது. ஆனால், கர்நாடகம் தற்போது 22 இலட்சம் ஏக்கர் பாசனம் செய்கின்றது.

தமிழகத்தின் பாசனப் பரப்பு 1.75 லட்சம் ஏக்கர் குறைந்துவிட்டது.

இந்தத் தீர்ப்பில் பெங்களூரு நகரத்தை வானளாவப் புகழ்ந்து, அதற்குக் குடிநீர்த் தேவையைக் கணக்கில் எடுக்க வேண்டும் என்றுசொல்லி இருக்கின்றார்கள். அதன் மூன்றில் ஒரு பங்கு பரப்புதான் கணக்கில் எடுக்கப்படும் என்று நடுவர் மன்றம் சொன்னதை நிராகரித்து விட்டு, 10 டிஎம்சி கொடுக்க வேண்டும் என்று சொல்வது திட்டமிட்ட அநீதி ஆகும்.

இங்கே 16 மாவட்டங்கள், சென்னை மாநகரமும் குடிதண்ணீருக்கும் காவிரியைத்தான் நம்பி இருக்கின்றார்கள்.

காவிரித் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது குறித்துத்தான் வழக்கு.

இதில் நிலத்தடி நீரைப் பற்றிப் பேச வேண்டியதே இல்லை.

மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் 2017 ஜூன் மாதம் வெளியிடப்பட்ட இந்தியாவின் மாறுகின்ற நிலத்தடி நீர் வளங்கள் என்ற விரிவான அறிக்கை, காவிரி பாசனம் பெறும் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்பட்டு வருவதாகக் கூறுகின்றது.

எதிர்காலத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் இருக்காது என்றும் கூறுகின்றது. ஆற்றில் தண்ணீர் ஓடாவிடில், நிலத்தடி நீர் மண்ணுக்குள் எப்படித் தேங்கும்.

இந்தத் தீர்ப்பின் 434 பக்கம் தொடங்கி 438 பக்கம் வரையிலும், நிலத்தடி நீர் குறித்துத் தமிழ்நாட்டுக்கு ஓர வஞ்சகம் செய்யும் கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும்; பின்னர் நாடாளுமன்றத்தில் திருத்தங்களோடு கூட மாறுதல் செய்து ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறுகின்றது.

பக்கம் 457 ல்,
We direct that a scheme shall be framed by the Central Government within a span of six weeks from today so that the authorities under the scheme can see to it that the present decision which has modified the award passed by the tribunal is smoothly made functional and the rights of the States as determined by us are appositely carried out.

காவிரி நடுவர் மன்றம் வெளியிட்ட இறுதித் தீர்ப்பில், பாரா 290 இல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டது. அதன் தலைப்பே இதுதான்:

Mechanism (Cauvery Management Board) for implementation of Tribunal’s decisions.

பக்கம் 336 வாசிக்கின்றேன்.
It thus, recommended that the Cauvery Management Board be constituted on the lines of Bhakra Beas Management Board by the Central Government. It underlined that unless an appropriate mechanism was set up, the prospect of implementation of its decision would not be secured.
It also recommended the composition of the Cauvery Water Regulatory Committee and outlined its functions.

அதாவது, காவிரி நடுவர் மன்றம் கூறிய காவிரி மேலாண்மை வாரியம் Cauvery Management Board என்ற சொல்லே இந்தத் தீர்ப்பில் இல்லை. உயர்நீதிமன்றம் திட்டமிட்டு இந்தச் சொற்களைத் தவிர்த்து இருக்கின்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலும் ஏற்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா சொல்லி விட்டார்.

நடுவர் மன்றம் அறிவித்தபடி கர்நாடகம் தண்ணீர் தரவில்லை. இப்போது உச்சநீதிமன்றம் நமக்கு அநீதியாக அறிவித்து இருக்கின்ற இந்த அளவுத் தண்ணீரையாவது கொடுப்பார்களா? இல்லை.

அடுத்து வரப்போகின்ற அபாயம் என்ன?
மேகேதாட்டு, ராசிமணலில் கர்நாடகம் புதிய அணைகளைக் கட்டப்போகின்றது.

2015 டிசம்பர் முதல் வாரத்திலேயே பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் அனந்தகுமார் வீட்டில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய ரகசிய சதி ஆலோசனைக் கூட்டத்தில், சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கலந்துகொண்டார். ‘வெளிப்படையாக நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம்; ஆனால் நீங்கள் அணைகளைக் கட்டிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டார்கள்.

இந்த அணைகள் கட்டப்பட்டால், கபினி, கிருஷ்ணராஜ சாகருக்கு உபரித்தண்ணீர் வராது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் தண்ணீர் கொடுக்கப் போவது இல்லை.

எனவே, தமிழக முதல்வர், அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமரைச் சந்திக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்; கர்நாடகம் புதிய அணைகளைக் கட்டுவதை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்த வேண்டும்.

உச்சநீதிமன்றம் தந்து இருக்கின்ற இந்த அநீதியான தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும்; அரசியல் சட்ட அமர்வில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதியாகத் தமிழகம் முன்வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் வைகோ அந்த கூட்டத்தில் பேசினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, February 22, 2018

வள்ளுவர் கோட்டத்தில நீட்டுக்கு எதிரான ஆர்பாட்டம்!

சமூக நீதி பாதுகாப்புக்கானப் பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 22-02-2018 நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது,

இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திமுக மாநில மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் மதிமுக மாணவரணியினர் ஏராளமாக கலந்துகொண்டனர்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் வைகோ பங்கேற்பு!

காவிரி பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து தலைமை செயலகத்தில் இன்று 22-02-2018 நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மதிமுக சார்பாக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் கலந்து கொண்டார்.

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். 

அந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'காவிரி விவகாரத்தில் அரசுத் தொடர் நடவடிக்கைகளை விரைவாகவும், உறுதியாகவும் எடுக்க அனைவரது ஆலோசனைகளும் தேவை. அனைத்துக்கட்சித் தலைவர்கள் தங்களது ஆலோசனையை வழங்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

உப்பளத் தொழிலாளர்களின் பிரச்சனையில் விரைந்து முடிவெடுத்திடுக! வைகோ அறிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டம் - செய்யூர் வட்டம், சூனாம்பேடு அடுத்த வில்லிப்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் பத்மா கெமிக்கல்ஸ் (உப்பளம்) பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த 1989 முதல் இயங்கி வருகின்றது. மத்திய அரசிடம் இருந்து 427.30 ஏக்கர், மாநில அரசிடம் இருந்து 1223 ஏக்கர் உப்பள நிலங்களை குத்தகைக்கு எடுத்து உப்பு விளைவித்து வருகின்றது.


பாத்தி கட்டுதல், உப்பு மிதித்தல், உடைத்தல், சேர்த்தல், அம்பாரம் கட்டுதல் மற்றும் பல பணிகளில் சுமார் 900 தொழிலாளர்கள் கடந்த 27 ஆண்டுகளாக, ஓராண்டில் 9 மாதங்களுக்கும் மேல் பணிபுரிந்து வருகின்றார்கள்.

ஆண்களுக்கு ரூபாய் 290ம், பெண்களுக்கு ரூபாய் 140ம் நாள் ஒன்றுக்கு ஊதியமாக தரப்படுகின்றது. குறைந்தபட்ச ஊதியம் கூட யாருக்கும் தரப்படுவது இல்லை. இதுவரை நு.ளு.ஐ., ஞ.கு. வசதிகள் கிடையாது. காலணி, கையுறை உள்ளிட்ட பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படுவது இல்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, ஓய்வறை என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடையாது.

வெறும் கால்களாகல் மேற்கண்ட பணிகளைச் செய்வதாலும், தொடர்ச்சியாக 25 டிகிரிக்கு மேல் காரத்தன்மையுள்ள உப்பு நீரில் பணி செய்வதாலும் கால்களிலும், உடலிலும் பல்வேறு தோல் நோய்கள் உருவாகி துன்பப்படுகின்றனர்.

பாண்டிச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் கெம்பாப் ஆல்கலைஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு, அதன் துணை நிறுவனமான வில்லிப்பாக்கம் பத்மா கெமிக்கல்ஸ் உப்பு உற்பத்திப் பிரிவு சராசரியாக ஆண்டுக்கு 80,000 டன் உற்பத்தி செய்து அனுப்புகின்றது. இந் நிறுவனம் ரசாயன வேதிக் கழிவுகளை விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கந்தாடு உப்பளப் பகுதியிலும், அதை ஒட்டியுள்ள விவசாயப் பகுதிகளிலும் பல ஆண்டுகளாகக் கொட்டி வருகின்றனர்.

இதனால் உப்பளத்தில் பணிபுரியும் தொழிலாளிகள், உப்பளத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கும், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்திற்கும் உட்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, மக்கள் தோல் வியாதி உள்ளிட்ட கடுமையான பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். செய்யூர் வட்டத்தில் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாலைவனமாக மாறி வருகின்றது.

குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலம், உப்பு எடுப்பதற்கு மட்டுமே தவிர மாறாகச் பத்மா கெமிக்கல்ஸ் நிர்வாகத்தின் ரசாயனக் கழிவுகள் கொட்டுவதற்கு அல்ல. சட்ட விரோதமாக ரசாயனக் கழிவுகளைக் கொட்டி நீரையும், நிலத்தையும் மாசுபடுத்தி இருப்பின் குத்தகையை ரத்து செய்து கடுமையான, சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

உப்பளத்தில் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை முறையாக வழங்காமல், அதிகாரிகள் துணை கொண்டு தொழிலாளர்களின் உரிமைகளைக் கொடுக்க மறுத்து, காவல்துறை துணை கொண்டு அச்சுறுத்துவது சட்ட விரோதம் ஆகும்.

தொழிலாளர்களின் உரிமைக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்களையும், குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று நிர்வாகத்தின் சார்பில் காவல்துறை மிரட்டுவதும் கண்டனத்திற்குரியது.

தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களையும், உப்பள நிர்வாகத்தையும் அழைத்துப் பேசி உரிய தீர்வை எடுத்திட வேண்டும். தவறினால், ஒத்த கருத்துள்ள ஜனநாயக சக்திகளைத் திரட்டிப் போராட வேண்டிய நிலை வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 22-02-2018 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை