Sunday, February 18, 2018

மே 17 இயக்கம் முன்னெடுக்கும் தமிழீழ மாநாடு!

சென்னையில் மே 17 இயக்கம் நடத்திய தமிழீழ மாநாடு 18-02-2018 அன்று காலை 9.00 மணி முதல் இரவுவரை, சென்னை :சேப்பாக்கம், சிவானந்தா சாலை அண்ணா அரங்கத்தில் நடந்தது.

அன்று மாலை 4 மணி அளவில் மதிமுக பொதுச் செயலாளரும், வாழ்நாள் தமிழீழ ஆதரவாளருமான  வைகோ அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடந்தது.

இந்த மாநாட்டில், தமிழீழத்திற்கு இடைகால அரசியல் அமைப்பு ஏற்ப்படுத்தி கொடுத்த மலேசிய நாட்டின், பினாங்கு மாநில துணை முதல்வர் ஐயா ராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது வைகோ எனக்கு அண்ணன் மட்டுமல்ல. என் ஆசான் என குறிப்பிட்டார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேசும்போது, ஸ்டெர்லைட்டை எதிர்த்து தொடக்கம் முதல் தொடர்ந்து போராடுபவர் வைகோ. அதற்காக மட்டும் அவர் இழந்தது ஏராளம் என குறிப்பிட்டார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, எந்த கூண்டில் அடைத்தாலும். எந்த கூட்டில் இருந்தாலும் இந்த புலி உறுமும். எந்த கூண்டில் இருந்தாலும் இந்த புலி விடுதலை கீதம் இசைக்கும் என்பதை உலகம் அறியும்.

என்னை பொறுத்தவரை உண்மையாக யார் பாடுபட்டர்களோ அவர்களை என்னை போன்று முன்நிறுத்தியது யாரும் கிடையாது. என்னை முன்னிறுத்த வேண்டும் என எண்ணியதில்லை நான்  என பேசினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment