Friday, February 23, 2018

அதிமுக செய்தி தொடர்பாளர் புதுக்கோட்டை செல்வம் மதிமுகவில் இணைந்தார்!

தூத்துக்குடி மாவட்டம் - புதுக்கோட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் புதுக்கோட்டை செல்வம் அவர்கள் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை தாயகத்தில் 22-02-2018 அன்று சந்தித்து, பொன்னாடை அணிவித்து கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், விவசாய அணி மாநிலச் செயலாளர் ஆடுதுறை இரா.முருகன், சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளர் முராத் புஹாரி, தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன், வடசென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.சி.இராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment