Wednesday, February 14, 2018

மதிமுக, திமுக மற்றும் ஏனைய கூட்டணி கட்சிகளின் கண்டன போராட்டம்!

இராமநாதபுரம் அரண்மனை முன்பு மதிமுக, திமுக மற்றும் ஏனைய கூட்டணி கட்சிகளின் சார்பில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கண்டன கூட்டம் நேற்று 13-02-2018 நடந்தது. 

அந்த கூட்டத்தில் ம. தி. மு. க. கொள்கை விளக்க அணி செயலாளர் அழகுசுந்தரம் கலந்து கொண்டு உரையாற்றுனார். அது சமயம் அ. தி. மு. க. அமைச்சர்கள் கொள்ளையடித்தத நாடித் துடிப்பை படம்பிடித்து காண்பித்தார். தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணி கண்டனின் அடாவடித் தனத்தை உடனே நிறுத்த வேண்டும் என்பதுடன் இல்லையேல் உங்கள் மந்திரிப் பதவி பறிக்கப்படும் என்றும் கோடிட்டு காட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் ம. தி. மு. க. மாவட்ட செயலாளர் குணா அவர்களும் அவை தலைவர் சாதிக் அலி அவர்களும் பங்கேற்று பேசினார்கள்.

தகவல்: சாதிக் அலி (ராமநாதபுரம் மாவட்ட அவைதலைவர்)

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment