Thursday, July 19, 2018

சரத்பவார், யஷ்வந்த் சின்கா ஆகியோருடன் வைகோ சந்திப்பு!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத்பவார் அவர்களை இன்று 19.07.2018 காலை 9.30 மணி அளவில் அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து, செப்டம்பர் 15 ஈரோட்டில் நடைபெற இருக்கும் மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

சரத்பவார் அவர்கள் வருவதாகக் கூறி வைகோ அவர்களிடம் ஒப்புதல் தந்தார்.

18.07.2018 இரவு 8 மணி அளவில், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்கா அவர்களை அவரது இல்லத்தில் வைகோ அவர்கள் சந்தித்து, செப்டம்பர் 15 ஈரோடு மாநாட்டுக்கு வருமாறு அழைத்தபோது, வருவதாக ஒப்புதல் தந்தார்.

மேற்கண்ட தகவலை மதிமுக தலைமை நிலையம் தாயகம் இன்று 18-07-2018 செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment