Sunday, July 29, 2018

பொய்க் குற்றச்சாட்டினால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி டாக்டர் ராஜமார்த்தாண்டத்தின் நண்பர்கள், உறவினர்கள் வைகோவுக்கு நன்றி!

அசாம் மாநிலத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றி வந்த டாக்டர் ராஜமார்த்தாண்டன் பொய்க் குற்றச்சாட்டின் பேரில் அம்மாநில காவல்துறை அதிகாரிகளால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இச்சம்பவம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் கவனத்திற்கு வந்ததையடுத்து அசாம் மாநிலத்தின் முதலமைச்சரை தொடர்பு கொண்டு ராஜமார்த்தாண்டத்தை மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொண்டார்..

தன்னை பணியில் அமர்த்த உரிய நடவடிக்கை மேற்கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவர்களை, 28.07.2018 சனிக்கிழமை கலிங்கப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறை உயர் அதிகாரி ராஜமார்த்தாண்டத்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நேரில் சந்தித்து அசாம் பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்ற வகையில் நினைவுப் பரிசு வழங்கி தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, உலகத்தில் எந்த தமிழனுக்கும் துன்பம் நேர்ந்தாலும் தன்னால் இயன்ற அளவுக்கு உதவி செய்வேன் என கூறினார்.

உலகத்தில் தமிழனுக்கு எங்கு துன்பம் நேர்ந்தாலும் முதலில் குரல் கொடுப்பவர் வைகோதான் என ராஜமார்த்தாண்டத்தின் உறவினர்களும் நண்பர்களும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment