Wednesday, July 25, 2018

கல்குவாரியை மூடவேண்டும்-வைகோ வேண்டுகோள்!

ராஜபாளையம் அருகே சிவலிங்கபுரத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. அங்கு வெடி வைத்ததால் அதிர்வு காரணமாக பக்கத்தில் இருக்கும் அரசு பள்ளி கட்டிடத்தின் மேல் கூரை இடிந்து இரு மாணவர்க்க்ளுக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது.

இதையறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 24-07-2018 அன்று பள்ளி சென்று மாணவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் கல் குவாரிக்கு சென்று பாரவையிட்டு அங்கு கல் வெட்டி எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டதையும், அதிர்வுகளால் கட்டடங்கள் பாதிக்கப்படுவதையும் அறிந்துகொண்டு மக்களுடன் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு கல்குவாரியை மூட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

உடன் மதிமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்சி பேரவை

No comments:

Post a Comment