Sunday, July 3, 2016

ஜூலை 4 ல் குமரி மாவட்ட கழக கண்மணிகளை சந்திக்கிறார் வைகோ!

மாவட்ட வாரியாக கழக கண்மணிகளை சந்தித்து வருகிறார் தமிழின முதல்வர் வைகோ அவர்கள். எத்தனை தோல்விகள் நிகழ்ந்தாலும் சோர்ந்து போகாத தொண்டர்களை கொண்ட இயக்கமாக மதிமுக விளங்கி வருகிறது என்பதை எதிரிகள் கூட ஒப்புக்கொள்வார்கள். அப்படி பட்ட இயக்கத்தின் தொண்டர்களை தலைவன் சந்தித்து உணர்வுபூர்வமாக உரையாற்றும்போது மேலும் கழக கண்மணிகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. 

அவ்வண்ணமாக வருகிற 04-07-2016 அன்று மாலை 4 மணி அளவில் நாகர் கோயிலில் குற்றாலம் பிள்ளை மருத்துவமனை எதிரில் அமைந்திருக்கும் PD.பிள்ளை திருமணமண்டபத்திற்கு தமிழ்நாட்டின் ஊழியன் வைகோ வருகிறார். எனவே கழக மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய மற்றும் ஏனைய நிர்வாகிகளே, கழகத்தின் அடிநாதமாக விளங்குகிற தொண்டர்களே அனைவரும் கலந்துகொண்டு சிறப்பாற்ற அன்போடு அழைக்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment