Sunday, July 24, 2016

தென்சென்னை மேற்கு மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!

எம்.ஜி.ஆர் நகர், ஓம் சர்மா திருமண மண்டபத்தில் தென்சென்னை மேற்கு மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று 24-07-2016 மாலை நடந்தது.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இழப்புகள் எங்கள் வேகத்தை தடுக்காது. இழப்புகள் எங்களுக்குப் புதிதல்ல. மீத்தேனை மத்திய அரசு திணிக்க முயல்கின்றது. தமிழக அரசு தடுக்க வேண்டும். படிம பாறை வழக்கிலும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சோழ மண்டலத்தை வேளாண் காப்பு மண்டலமாக இருக்க வேண்டும். கெயில் விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லக் கூடாது.

பியூஸ் அவர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதச்சார்பற்ற தன்மையை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். விமான விபத்து மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது.அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

உள்ளாட்சி தேர்தலை மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து சந்திக்கும். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் Aug 3 மார்க்ஸிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

நிகழ்வு தொடக்கமாக தென்சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் அண்ணன் Saidai P Subramani அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். பின்னர் நிர்வாகிகள் உரையாற்றினார்கள். சிறுவன் பிரபாரகன் அந்த பெயருக்கேற்ற வீரத்துடன் உரையாற்றி தலைவர் வைகோ அவர்களின் நன் மதிப்பை பெற்றது பாராட்டுக்குரியதாகும்.

இறுதி சிறப்புறையாற்றிய கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரை தொடங்கையிலே, இயக்கத்தின் உயர்வே தன் வாழ்வு என்று பாடுபட்டு வந்த,22 ஆண்டுகளுக்காக பாடுபட்டு வருகின்ற ஆருயிர்த் தம்பி Saidai P Subramani அவர்களே என பேச தொடங்கினார்.

கடுமையான தாக்குதலுக்கு மத்தியில்,சோதனைகளுக்கு மத்தியில் இன்ப அதிர்ச்சியான நிகழ்ச்சி. உங்களால் தான் நான் இயங்குகின்றேன். உங்கள் உயர்வை நினைத்து, பட்ட பாட்டுக்கு பலன் கிடைக்கவில்லையே என்று நீங்கள் வருகின்ற பொழுது உங்களையும், உங்கள் குடும்பத்தையும் மறக்க முடியும். நான் நன்றி உணர்ச்சி மிக்கவன்.

இந்த சூழ்நிலையிலும் 3 இலட்சத்து 22 ஆயிரம் கொடுத்திருக்கின்றீர்கள். நீங்கள் தான் முதல் மாவட்டம். 22ஆண்டுகளாக கட்சியை நடத்தி வருகின்ற நீங்கள்,100 தான் என்று அறிவித்தேன். எனக்கு என்ன மகிழ்ச்சி என்றால், எல்லோரும் அண்ணன் தம்பிகளாக ஒருங்கிணைந்து பணியாற்றியிருக்குன்றீர்கள். தம்பி சுப்பிரமணி இந்த அணுகுமுறை கழகத்தை உயர்த்தும். தொண்டர்களின் உதிரத் துளியிலே உருகி உருவான கட்சி. நம்மை போன்று சோதனைகள் நம் கட்சி போல் இந்தியாவில் யாருக்கும் கிடையாது. தோற்பதைப் பற்றி கவலைப்படாதே என்பதற்கு வரலாற்றைச் சொல்வார்கள். ஆறு முறை போர்க்களத்திலே தோற்றான் ஸ்காட்லாந்து மன்னன் இராபர்ட் புருஷ்.தோற்பவர் வெல்வார் என்பதற்கு இராபர்ட் புருஷ். அரசியல் கட்சிகளின் வரலாற்றை பற்றி எழுதும் போது, கிரேக்கத்து பீனிக்ஸ் பறவை போல நின்றார்கள் என்பார்கள். நம் தலைவரின் பெயரைத் தாங்கியிருக்கின்ற தம்பி பேசினார். எதிர்காலத்தில் ஒரு சொற்பொழிவாலனாக வருவான். அந்தக் குடும்பத்தின் தியாக உணர்வை சத்யா சொன்னார். சின்னவன் (எ) சேக் அப்துல்லா இருக்குறாரே அவருக்கு வந்த துன்பம் யாருக்கும் வராது. அப்படி இருப்பினும் இயக்கப் பணியாற்றுகின்ற ,சின்னவன்கள் இருக்கின்ற பொழுது கழகத்தை யாரும் சாய்க்க முடியாது.

வானம் பொழிகின்றது. வீரபாண்டிய கட்டபொம்மன் தேடிய பொழுது, வேட்டை நாயை முயல் விரட்டியது போல, அது போல எவ்வளவு தான் பழிச்சொற்களைத் தாங்குவோம், யார் மீதும் எங்களுக்கு கோபம் இல்லை. யார் குடியைக் கெடுத்தோம். மனதில் இருக்கின்ற துயரத்தை வைத்துத் தான் பேசினேன்.

இந்த வைகோ உங்களை ஒரு நாளும் தலைகுனிய விட மாட்டான். உங்களுக்கு புகழ் கொடுக்காவிட்டாலும், பழிச்சொல்லுக்கு ஆளாக விட மாட்டான். ஈழத்தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் ஆதரித்துப் பேசியதால் வழக்கு தொடுக்கப்பட்டது. 2009 இல் தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. நான் சிறை செல்வேன் என்று கவலைப்பட்டதில்லை. எந்த பழிச்சொல்லும் நிற்காது. நீங்கள் கொடுக்கின்ற 3 இலட்சத்தை 30 கோடியாக நினைக்கிறேன்.

அடுத்தடுத்த களங்களில் நல்ல முயற்சி எடுத்தோம். ஊழலற்ற ஆட்சிக்கு அடித்தளம் அமைக்கப் பாடுபட்டோம். மதுரை மாநாடு அதிர்வலைகளை உருவாக்கியது. நான் என்னை முன்னிலைப்படுத்தியதில்லை என்பது தோழர்களே உங்களுக்குத் தெரியும். ஸ்லைர்லைட் வழக்கில் 7 மணி நேரம் வாதாடினேன். உங்கள் நேர்மை அனைவரும் அறிந்த ஒன்று என்று லிபரான் சொன்னார். நீங்கள் பெருமைப்படுகின்ற ஒரே விசயம் நேர்மை. அதை சிதைக்க முயன்றார்கள். அது முடியாது. அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். சென்றவர்கள் பற்றி கவலையில்லை. ஒருவர் போனால் அங்கே வேகமாகப் பணியாற்றுகின்ற கழக குமார், சுப்பரமணி வருகின்றார்.

எல்லா இடத்திலும் தோற்றுப் போன இந்தக் கட்சியில் இவ்வளவு உறுதியான தோழர்கள் என்று நினைப்பார்கள். நம் இலக்கு தூய்மையானது என்று பேசினார்.

தகவல்: தீபன்

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment