Tuesday, January 31, 2017

வைகோ தொடுத்த வழக்கு; மதுரை உயர்நீதிமன்றம் திட்டவட்ட ஆணை!

தமிழ்நாட்டில் சுற்றுச் சூழலை நாசமாக்கி, கால்நடைகளின் இனப்பெருக்கத்திற்குக் கேடு செய்து, விவசாய நிலங்களை அடியோடு பாழாக்கி வரும் சீமைக் கருவேல மரங்கள் உயிர்க்காற்றை உறிஞ்சிக்கொண்டு, கரிக்காற்றை வெளியிடுகின்றன; வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவி நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சிக் கொள்கின்றன; இதனால், மனித வாழ்க்கைக்கும் கால்நடைகளுக்கும், பெரும் கேடு விளைவதால் சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வைகோ அவர்கள் ரிட் மனு தாக்கல் செய்து வழக்குத் தொடுத்தார். 

நீதியரசர்கள் அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ‘நீதிமன்றத்தின் வரம்பிற்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக, இந்த மாவட்ட ஆட்சியர்கள் எடுத்த மேல் நடவடிக்கை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தனர்.

அதன்பிறகு இந்த வழக்கு மூன்று முறை விசாரணைக்கு வந்தபோதும், சீமைக் கருவேல மரங்களை அகற்ற முதல் கட்ட வேலைகள் தொடங்கி இருப்பதாக அறிக்கை தந்தனர்.

2017 ஜனவரி 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் செல்வம், நீதியரசர் கலையரசன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வைகோவின் வாதங்களைக் கேட்ட நீதியரசர் செல்வம் அவர்கள், ‘13 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சீமைக்கருவேல மரங்களை அகற்றுகி;னற பணியை விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்றும், மாவட்டத் தலைநகரங்களில், மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் இப்பணி நடக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார்.

இன்று 2017 ஜனவரி 31 இல் இந்த வழக்கு அதே நீதியரசர்கள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

வைகோ தான் எடுத்து வைத்த வாதத்தில், 

“சீமைக் கருவேல மரங்களை அகற்ற இந்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாவட்ட நிர்வாகங்கள் முழுமையாகச் செயல்படுத்தவில்லை; 

20 சதவிகித மரங்கள்கூட அகற்றப்படவில்லை; 

மாவட்ட நீதிபதிகள் மிகுந்த அக்கறையோடு மாவட்டத் தலைநகரங்களில் இந்தப் பணியை மேற்பார்வை செய்தனர்;

பொதுமக்களின் சொந்த நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற முடியவில்லை என்று அரசு கூறுகின்றது; 

அந்தப் பட்டா நிலங்களிலும் தமிழக அரசாங்கத்தின் செலவிலேயே சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, அந்தச் செலவுத் தொகையை நில உடைமையாளர்களிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம்’;

மேலும், 13 மாவட்டங்கள் அன்றி, தமிழ்நாடு முழுவதிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற எனது ரிட் மனுவிலேயே கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கான உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டுகிறேன்” என்று கூறினார்.

நீதியரசர் செல்வம் அவர்கள், சீமைக் கருவேல மரங்களை அகற்ற;த திட்டவட்டமான ஆணை பிறப்பித்தார்.

அதன்படி, மாவட்ட ஆட்சியகர்கள், வட்ட ஆட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் முழு வீச்சில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; 

இதுவரை என்ன நடந்துள்ளது என்று நாங்களே சுற்றிப் பார்த்ததில் மிகக் குறைந்த அளவில்தான் வேலை நடந்து இருக்கின்றது;

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்த நீதிமன்ற ஆணையைத் துளியளவும் செயல்படுத்தவில்லை; எனவே இந்த நீதிமன்றம் அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு தாக்கீது பிறப்பிக்கின்றது; 

மாவட்ட நீதிபதிகளும், அதற்கு அடுத்த நிலையில் உள்ள முன்சீப்புகளும் இன்றைக்கு இந்த நீதிமன்றம் அறிவிக்கிற வழக்கறிஞர்களையும் சேர்த்துக்கொண்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றுவதை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த வேண்டும்; 

பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை நில உடைமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றாவிட்டால், அரசாங்கமே செலவு செய்து பொக்லைன் உள்ளிட்ட தேவையான இயந்திரங்களைக் கொண்டு அகற்ற வேண்டும்; 

அதற்காகச் செலவழிக்கப்பட்ட தொகையை இரண்டு மடங்காக நில உடைமையாளர்களிடம் வசூலிக்க வேண்டும்;

சீமைக் கருவேல மரங்களால் ஏற்படுகிற கேடுகள், ஆபத்துக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் உரிய முறையில் விழிப்புணர்வுக்கான விளம்பரம் செய்ய வேண்டும்; 

தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு மனுதாரர் வைகோ தனியாக ரிட் மனு தாக்கல் செய்யலாம்” என்று அடுக்கடுக்கான உத்தரவுகளைப் பிற்ப்பித்ததுடன், வழக்கு விசாரணையை பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் என மதிமுக தலைமை கழகமான தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, January 30, 2017

ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்து ஐ.நா.பொதுச்செயலாளருக்கும்,மனித உரிமை கவுன்சில் ஆணையருக்கும் வைகோ விளக்க அறிக்கை!

உலகத்தின் மனசாட்சியை உலுக்கிய ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்து கடந்த 60 ஆண்டு காலத்தில் சிங்கள அரசு செய்த கொடுமைகளையும், ஐரோப்பியர் வருகைக்கு முன் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் தனி அரசு அமைத்து வாழ்ந்த சிறப்பையும், தமிழர்கள் உரிமைகளுக்காக அறவழியில் போராடியதையும், 1976 மே 14 இல் வட்டக்கோட்டையில் தந்தை செல்வா அறிவித்த சுதந்திரத் தமிழ் ஈழப் பிரகடனத்தையும், இராணுவத்தின் துணை கொண்டு சிங்கள அரசு நடத்திய கொடிய அடக்குமுறையை எதிர்த்து தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் மூண்டெழுந்த ஆயுதப் புரட்சியையும், ஈழத் தமிழர்களுக்கு காங்கிரÞ தலைமையிலான இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத துரோகத்தையும், மனித உரிமைக் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதையும், ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அமைத்த மூவர் குழு அறிக்கையையும், மைத்ரி சிறிபாலசேனா அரசு தொடர்ந்து நடத்துகிற சிங்களக் குடியேற்றத்தையும், தமிழர்களுக்கு எதிரான அநீதியையும் பட்டியலிட்டு வைகோ விளக்கமான ஆங்கில அறிக்கைகளை ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அந்தோணிய குத்தேரசு அவர்களுக்கும், ஜெனீவா மனித உரிமைக் கவுன்சில் ஆணையர் அல்ராத் உசேன் அவர்களுக்கும் தனித்தனியாக மின் அஞ்சலில் அனுப்பியதோடு, துரித அஞ்சல் மூலமும் அனுப்பி உள்ளார்.


ஈழத்தமிழர் படுகொலை குறித்து சர்வதேச நீதி விசாரணை வேண்டும். சிங்கள இராணுவம், போலிÞ, சிங்களக் குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும். சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அறிக்கையில் சேனல்-4 வெளியிட்ட தமிழர் படுகொலைக் காட்சிகளையும், அண்மையில்கூட இரண்டு யாழ்ப்பாண மாணவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டது உள்ளிட்ட அண்மைக் கால நிகழ்வுகள் அனைத்தையும் வைகோவின் அறிக்கை விளக்கமாகத் தெரிவிக்கிறது.

ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2012 மார்ச் 27 ஆம் தேதியில் அன்றைய தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள், சபையில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தனது அறிக்கையோடு இணைத்து வைகோ அனுப்பி உள்ளார்  என தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

ஈழ தியாகி நினைவேந்தலில் வைகோவுடன், காசி ஆனந்தன், திருமுருகன் காந்தி, புகழேந்தி தங்கராஜ்!

மதிமுக சார்பில் தாயகத்தில் 29-01-2017 அன்று ஈழத் தமிழர்களுக்காக இன்னுயிர் ஈந்த வீரதியாகி முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு 8ம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், உரையாற்றுகையில், மருது பாண்டியர்கள் போல எங்களை நம்பியவர்களுக்காக எங்களையே தருவோம்.

மதிமுக இயக்கம் தொடங்கிய காரணமே விடுதலை புலிகளின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டதே. ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவலை காரணம் காட்டித்தானே என்னை திமுக கட்சியிலிருந்து நீக்கினார்கள் என வைகோ பேசினார்.

இளைஞர்கள் பாடுபட்டு போராடும் போது, அவர்களுக்கு பின்னால் துணையாக என்றுமே மதிமுக நிற்கும் எனவும் பேசினார் வைகோ. மெரினா புரட்சிக்கு அடிப்படை முத்துகுமாரின் தியாகம் எனவும் கூறினார்.

தமிழீழத்திற்காகவும் உதவிய, ஆந்திர முன்னாள் முதல்வர் திரு.என்.டி.ஆர். அவர்கள் தலைவர் வைகோ அவர்களை பிரதர் என்றுதான் அழைப்பாராம். ஈழ்த்தில் நடந்த தமிழர்களுக்கான வன்முறை குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் திலீபன் உண்ணாவிரத சிடியை போட்டு காண்பித்து ஆதரவு திரட்டிய போது. திரு.என்.டி.ஆர். அவர்கள் விடியற்காலை 3 மணிக்கு வரச் சொன்னாராம். தலைவர் வைகோ அவர்களுக்கு ஆச்சரியமாக போய் விட்டதாம். அதற்கு அவரது உதவியாளர், ஐயா அவர் மாலை 7 மணிக்கு படுத்து இரவு 2 மணிக்கு எல்லாம் எழுந்து காலை 5 மணிக்கெல்லாம் அதிகாரிகளை சந்திப்பார் என்றாராம்.

திரு.என்.டி.ஆர் சொன்னது போல தலைவரும் விடியற்காலை 3 மணிக்கெல்லாம் கேசட்டுடன் செல்ல, அங்கே தயாராக இருந்தாராம் என்.டி.ஆர். மேலும் தன் தெலுகுதேச எம்பிக்கள் அனைவரையும் காலை 4 மணிகெல்லாம் வரச்சொல்லி அந்த வீடியோவை பார்க்க வைத்தாராம்.

பிறகு அவர்களிடம். பிரதர் என்ன சொல்கிறாரோ, அதன்படியே மேலவையிலும். மாநிலங்களவையிலும் நடக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிட்டாராம்.

தகவல்: இணையதள நேரலை அம்மாபேட் கருணாகரன்

ஓமன் மதிமுக இணையதள அணி

ரோவர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே வைகோ உரை!

பெரம்பலூர் தந்தை ரோவர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா   நிகழ்வு நேற்று 29.01.2017 காலையில் நடந்தது.

இதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு பட்டதாரி மாணவச் செல்வங்கள் முன் உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில், கழக அரசியல் ஆலொசனை குழு செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர கணேச மூர்த்தியும் கலந்துகொண்டார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, January 28, 2017

ஈழ தமிழருக்காக உயிர் நீத்த தியாகி முத்துகுமார் நினைவேந்தல் தாயகத்தில்!


தமிழீழத்தில் இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்து போர் உக்கிரமாக தமிழீழ ராணுவமான விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்குமிடையே நடந்துகொண்டிருந்த வேளையில், போர நிறுத்தம் வேண்டும், தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டுமென்று தனது உடலை தீயிட்டாலாவது இந்தியா போர் நிறுத்தம் செய்யும், தமிழ்நாட்டு திமுக ஆட்சி அழுத்தம் கொடுக்கும் என நினைத்து தன்து உடலை பொசுக்கினான் முத்து குமார்.

அவன் மடிந்த பொழுது எழுதிய வாக்கு மூலத்தில் "ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கின்றேன்" என்று குறிப்பிட்டிருந்தும் "காதல் தோல்வியால் தற்கொலை" செய்துகொண்டான் என ஆட்சியில் இருந்த திமுக அரசு அறிவித்தது.

அந்த தியாகி தன் உயிரை தமிழீழ மக்களை காக்க கொடையளித்து நாளையுடன் 8 ஆம் ஆண்டு  2009 ஆம் வருடம் ஜனவரி 29 ஆம் நாள் முத்து குமார் இறந்த நாள்,

மதிமுக நினைவேந்தல் நிகழ்வாக தலைமை அலுவலகமான தாயகத்தில் நாளை 29-01-2017 மாலை நடத்துகிறது. 

தமிழீழ உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் கலந்துகொள்கிறார். தமிழீழத்திற்காக குரலெழுப்பிக்கொண்டிருக்கும் திருமுருகன் காந்தி, புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

வைகோ தலைமையில் நடக்கும் நிகழ்விற்கு, கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்துமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வேண்டுகிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

நண்பர் Dr.சந்திரசேகர் திரு உடலை சுமந்து மலர் வைத்து வைகோ மரியாதை!

வைகோ அவர்களின் மிக நெருங்கிய நண்பரும், அதிக அளவில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தவருமான சிறுநீரகவியல் நிபுணர் மருத்துவர் சந்திரசேகரன் (குமரன் மருத்துவமனை) அவர்கள் 28.01.2017 இன்று இயற்கை எய்தினார். 

இதை கேள்விபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் திருச்சியிலிருந்து சென்னை வந்து மருத்துவர் சந்திரசேகர் அவர்களின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.


எப்போதும் சுறுசுறுப்பாக, நல்ல உடல் நலத்துடன் இருந்தவர், ஒரு வாரப் படுக்கை காரணமாக, நேற்று இரவு திடீர் மாரடைப்பால் உயிர் நீத்தார். அவரது உடல் இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது திரு உடலை வைகோ உள்ளிட்டவர்கள் சுமந்து சென்று அடக்கம் செய்தார்கள்.


மருத்துவர் குடும்பத்திற்கு ஓமன் இணையதள அணி சார்பில் இரங்கலையும், குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Friday, January 27, 2017

திருச்சியில் மதிமுக நடத்திய இளைஞர் விழிப்புணர்வு பாசறையில் வைகோ உரை!

மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் இன்று 27-01-2017 திருச்சியில் இளைஞர் விழிப்புணர்வு பாசறை சட்டத்துறை நிகழ்வு நடந்தது.

இந்த நிகழ்வை கழக சட்டதுறை செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் சீரமைக் கருவேல மரங்களை அழித்து நீர்நிலைகளை பாதுகாத்திட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வென்று செயல்படுத்திய மக்கள் தலைவர் வைகோ அவர்களுக்கு பசுமை நாயகன் என பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், மதிமுக தலைவர்களான துரை பாலகிருஷ்ணன், சின்னப்பா, மருத்துவர் ரோஹையா ஷேக், சேரன்.வந்தயதேவன், கபினி சிதம்பரம், வெல்லமண்டி சோமு, மருத்துவர் சந்திரசேகரன், ஆவடி அந்தரிதாஸ், அழகுசுந்தரம், தி.மு.ராசேந்திரன், உதயகுமார், செந்திலதிபன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும் ஏராளமான இளைஞர்கள் பயிற்ச்சி பாசறையில் கலந்துகொண்டு சிறப்பு பெற்றார்கள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

பவானி தடுப்பணையை கண்டித்து மதிமுக ரயில் மறியலில்!

பவானி தடுப்பணையை கண்டித்து மதிமுக ரயில் மறியலில்!

கோவையில் பாவனி ஆற்றில் கேரளா அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து மதிமுக சார்பில் இன்று 27.1.17 மாபெரும் இரயில் மறியல் போரட்டம் நடைபெற்றது. 

காவல் துறையின் அடக்கு முறையைக் மீறி மதிமுக தொண்டர்கள் இரயில் நிலையம் உள்ளே சென்று தடுப்புகளைக் தாண்டி சென்று போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.

இதில் மதிமுக தலைவர்களான கணேச மூர்த்தி, கோவை மாவட்ட செயலாளர்கள், ஆர்.டி.மாரியப்பன், ஈசுவரன், கிருட்டினன் மற்றும் முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமாக கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி