Friday, January 13, 2017

படித்த பள்ளியில் மாணவர்களிடத்தில் பரிசளித்து வைகோ உரை!

கலிங்கப்பட்டி அரசு மேல் நிலை பள்ளி பரிசளிப்பு ஆண்டு விழா கூட்டம் இன்று 13-01-2017 காலை நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் முன்னாள் மாணவனாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.

உலகிலே பழமையான நாகரீகம் திராவிட நாகரீகம், தமிழ் நாகரீகம் என ஸ்பெயின் இராஸ் பாதிரியார் நிரூபித்திருக்கிறார்.

கீழடியில் நம் கலாச்சாரம் 3000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நாகரீகம் என் அங்குள்ள பள்ளி தலைமை ஆசிரியர் கண்டுபிடித்திருக்கிறார். அதை பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் மூலம் தெரியபடுத்தி, பதில் கடிதத்தில் தமிழக அரசுக்கு தெரிவிக்கிறேன் என பதில் பெற்று நடந்த ஆய்வில், இழை தளை அணிந்த காலத்திலே சாக்கடை கால்வாய் அமைத்து நாகரீகம் கடைபிடித்திருக்கிறான் என அந்த கால்வாய்களை கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்கள்

பரதநாட்டியம் ஆடிய பிள்ளைகளுக்கு சிறப்பாக பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என உரையாற்றினார். மாணவ செல்வங்களை பாராட்டி பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment