Saturday, January 21, 2017

நாகர்கோயிலில் தொண்டனின் தந்தையை நலம் விசாரித்த வைகோ!

தமிழ் இலக்கியத்திற்கு கருவூலங்களை தந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர் திரு. பொன்னீலன் அவர்களுக்கு குமரி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பாராட்டு விழா நேற்று 20-01-2017 மாலை 6 மணி அளவில் நாகர்கோயியிலில் குற்றாலம் பிள்ளை மருத்தவமனை எதிரில் அமைந்துள்ள பி.டி.பிள்ளை மண்டபத்தில் வைத்து நடந்தது.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டு நாவலாசிரியர் திரு. பொன்னீலன் அவர்களை பாராட்டி பேச வந்திருந்த வைகோ அவர்கள், பொதுக்குழு உறுப்பினர் ஜெரோம் ஜெயகுமார் தந்தையாரின் உடல் நலன் அறிந்து, அதை விசாரிக்க அவரின் வீடு தேடி சென்று நலம் அவரின் அருகில் அமர்ந்து நலம் விசாரித்தார். 

உடன் குமரி மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர். தொடர்ந்து ஜெரோம் ஜெயகுமார் அவர்களின் குடும்பத்தாருடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஒளிபடம் எடுத்துக்கொண்டார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment