Friday, January 6, 2017

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க மதிமுக ஆர்ப்பாட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இன்று 06-01-2017 மதுரையில், தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரியும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு 25 லட்சரூபாய் வழங்க கோரியும், விவசாயிகளுக்கு நிவாரண தொகையாக ஏக்கருக்கு ரூபாய் 30000 வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர், தமிழின முதல்வர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பேருரையாற்றி விவசாயிகளின் துயரங்களை பட்டியலிட்டார். அதற்கு முன் மதிமுக விவசாய அணி செயலாளர் ஆடுதுறை முருகன் அவர்கள் விவசாயிகளின் துயரங்களை எடுத்துரைத்தார்.

இதில், மதுரை மாவட்ட செயலாளர்கள், மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொண்டர்களும், ஏராளமான விவசாயிகளும் கலந்துகொண்டார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment