Sunday, June 18, 2017

ஈழத்துக்கு ஆதரவாக வைகோ பேசிய வழக்கு ஜூன் 21 க்கு ஒத்திவைப்பு!

கடந்த 15.07.2009 அன்று சென்னை, இராணி சீதை ஹாலில் ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசிய பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ மற்றும் 153 ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் தண்டிக்கத் தக்கது என்று அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு ஜூன் 17-ஆம் தேதி சனிக்கிழமை (17.06.2017) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அந்த விசாரணையில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ மீதான தேச துரோக வழக்கு விசாரணை ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment