Wednesday, June 21, 2017

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் ஆந்திராவை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் ஆலோசனை படி, திருவள்ளுவர் மாவட்ட செயலாளர் டிஆர்ஆர்.செங்குட்டுவன் அவர்களின் ஏற்பாட்டில், திருவண்ணாமலை, வேலூர்,காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்து, பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் ஆந்திர அரசை கண்டுத்து இன்று காலை 10 மணியளவில், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு காந்திசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினார்.

நன்கு மாவட்ட செயலாளர்கள், கழக முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment