Monday, September 11, 2017

கலிங்கப்பட்டியில் தொடங்கிய 109 ஆவது அண்ணா பிறந்த நாள் மாநாடு பரப்புரை!

வரலாற்றில் இடம் பிடிக்கும் கழக மாணவரணி பரப்புரைப் பயணமானது, கலிங்கப்பட்டியில் பறை அடிக்க, அதிர்வேட்டு முழங்க, கழக மாணவர் அணிச் செயலாளர் மணவையும், கே.எம்.ஏ. நிஜாமும், கல்லத் தியான், ஒ.செ.வ.சீனிவான் பயணப் பொறுப்பாளர்கள் மதியழகன் சத்யகுமாரன் வாழ்த்துரைக்க, சிவகங்கை மாவட்டச் செயலாளர் செயலாளர் புலவர் சே. செவந்தியப்பன் உரையாற்றி, அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்திக் கொடி அசைக்க, வீரத்தாய் மாரியம்மாள் படத்திற்கு மாலை அணிவித்து உறுதி ஏற்க, மாரி பொழிந்து பூமி குளிர்ந்திட, பட்டுக்கோட்டை அழகிரிசாமி என்ன உணர்ச்சியோடு பயணம் புறப்பட்டாரோ அதே உணர்ச்சியோடு, தலைவரைத் தந்ததால் சிறந்த கலிங்கப் பட்டியில் இருந்து தஞ்சை நோக்கிப் இன்று 11-09-2017 மாலை புறப்பட்டது.

இந்த பரப்புரை பயண நிகழ்ச்சியை கலிங்கப்பட்டியில், ஏற்பாடு செய்தவர் இரா .ஜோதிராஜ் உள்ளிட்ட கழகக் கண்மணிகள். 

அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment