Tuesday, September 26, 2017

ஐநா முற்றத்தில் திலீபன் படத்திற்கு வைகோ உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் மலரஞ்சலி!

இந்த நாள்,செப்டெம்பர் 26 ஆம் தேதி தமிழர்களுக்குத் துக்க நாள் ஆகும் என்றும், பொதுவாக்கெடுப்பின் மூலம் மலர்ந்த நாடுகளின் பெயர்களையும், எந்த வருடம் மலர்ந்தது என்பதையும் பட்டியலிட்டு இரண்டு முறை ஐநா மனித உரிமை ஆணையத்தில் பேசிவிட்டு, பின்னர் நடந்த கலந்துரையாடலிலும் விளக்கம் தந்து பொதுவாக்கெடுப்புதான் ஒரே வழி என எடுத்துரைத்துவிட்டு, ஐநா முற்றத்தில் ஈழபடுகொலையை சுட்டிகாட்டும் படங்கள் அடங்கிய கண்காட்சி அரங்கத்தில் வைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

உடன் தமிழீழ தமிழர்களும் மலரஞ்சலி செலுத்தினார்கள். வைகோ வீர முழக்கம் எழுப்ப அதை ஆக்ரோசமாக முழங்கினார்கள் தமிழீழ தமிழர்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment