Sunday, January 14, 2018

கலிங்கப்பட்டியில் களை கட்டிய பொங்கல்!

வைகோ பிறந்த கிராமமான கலிங்கப்பட்டியில் பொங்கல் நிகழ்வுகள் 14-01-2018 சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

அப்போது அவர் செய்தியாளர்களிடத்தில், 

எல்லோரும் சேர்ந்து பகிர்ந்து, மகிழ்ந்து வீர விளையாட்டுக்களை விளையாடி, உழுது தமிழர் நாகரீகத்தினுடைய பண்பாட்டின் விழாதான் தை பொங்கல் திருவிழா. நாங்கள் ஆண்தோறும் எங்கள் கிராமத்தில் மிகசிறப்பாக கொண்டாடுகிறோம்.

விளையாட்டு போட்டிகள் நடத்துகிறோம். வயது முதிர்ந்தவர்களில் இருந்து சின்னஞ்சிறு பிள்ளைகள் வரை விளையாட்டு போட்டிகள் நடத்துகிறோம். அதன்பிறகுந் நான் எல்லா தெருக்களுக்கும் செல்கிரேன். அரசியல் பேசுவதில்லை. எல்லா வீடுகளுக்கும் சென்று அவர்கள் வரவேற்பை பெற்று அவர்களுக்கு வாழ்த்து சொல்கிறேன். சிறு குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன்.

ஒற்றுமையாக இருக்கவேண்டும். சமூக ஒற்றுமை வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். காரணம் தமிழ்நாட்டிலே, எங்கள் கிராமத்திலே அத்தனை சாதி மக்களும் இருக்கின்றார்கள். சண்டை சச்சரவு இல்லாத ஒற்றுமை இவ்வளவு காலம் காப்பாற்றப்பட்டு வருகிறது. அதைதான் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வாழ்த்தாக சொல்கிறேன். 

எங்கள் ஊரில் இருந்து படித்து ஏராளமான பொறியியலாளர்கள் படித்து வெளிநாடுகளில் இருக்கிறார்கள். மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவரவர்கள் முயற்ச்சி செய்து முன்னேறி எங்கு இருந்தாலும் பொங்கலுக்கு தங்கள் ஊருக்கு வந்துவிடுகிறார்கள்.

தைபொங்கல் திருவிழாவில் தமிழ்நாட்டுக்கு இதே போல சாதி மத பூசல்கள் இல்லாத, வாழ்வாதாரங்கள் காக்கப்பட்ட தமிழகமாக, இயற்கைகள், சுற்றுசூழல்கள் அழிக்கப்படாத தமிழகமாக, சங்க காலத்தில் எவ்வளவு உண்மையான வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்தார்களோ, அத்தகைய வாழ்வை மேற்கொள்கிற தமிழ் சமுதாயத்தை காண்கிற தமிழகமாக திகழ வேண்டுமென்று பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என வைகோ செய்தியாளர்களிடம் கலிங்கப்பட்டியில் தெரிவித்தார்.

மேள தாளங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது பொங்கல்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment