Friday, January 5, 2018

வாழ்நாள் உறுப்பினர் விண்ணப்பம் மதிமுக தலைமை நிலையத்தில் கையளிப்பு!

வாழ்நாள் உறுப்பினர் விண்ணப்பம் மதிமுக தலைமை நிலையத்தில் கையளிப்பு!

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை உறுப்பினர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராக சேர ஏற்கனவே கடந்த டிசம்பர் 2017 ல் விண்ணப்பித்திருந்தார்கள்.

அந்த 28 விண்ணப்ப படிவங்கள் சென்னையில் அமைந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைமை நிலையமான தாயகத்து நிர்வாகிகளிடத்தில் இன்று 5-1-2018 கையளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை மூலம் 35 பேர் வாழ்நாள் உறுப்பினர்களாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது மாவட்ட செயலாளர் சைதை சுப்பிரமணி, கவிஞர் மணிவேந்தன், வைகோ தனிச்செயலர் அருணகிரி, தாயகம் ருத்ரன், ஸ்டாலின் சஹாயா, இணையதள நேரலை அம்மாபேஹ்ட்டை கருணாகரன், மதன், ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை செயலாளர் மைக்கேல் செல்வ குமார் ஆகியோர் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment