Monday, March 16, 2020

இந்தியாவில் நிலப்பத்திரங்கள், எந்த அளவிற்குக் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளது? வைகோ, சண்முகம் ஆகியோரது கேள்விகளுக்கு, அமைச்சர் அளித்துள்ள விளக்கம்!

கேள்வி எண் 1905
கீழ்காணும் கேள்விகளுக்கு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) இந்திய நிலப்பதிவு ஆவணங்களை கணினிமயமாக்கும் திட்டம் (Digital India Land Records Modernisation Programme- DILRMP) , 2020 ஜனவரி முதல் நாள் வரையிலும், எத்தனை விழுக்காடு நிறைவு பெற்று இருக்கின்றது?
(ஆ) இந்தத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள்.
(இ) இப்போது இந்தத் திட்டத்தின் நிலை என்ன? மாநில வாரியாக ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்ட பட்டியல் தருக.
(ஈ) இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, கடந்த ஐந்து ஆண்டுகளில் போதுமானதாக இருந்ததா?
அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அளித்துள்ள விளக்கம்
(அ) 2020 ஜனவரி 1 ஆம் நாள் நிலவரப்படி, இந்தியாவில் உள்ள 6 இலட்சத்து 55 ஆயிரத்து 959 கிராமங்களில், 5 இலட்சத்து 91 ஆயிரத்து 221 கிராமங்களில் நிலப்பத்திரங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டு விட்டன. 90 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்தியா முழுமையும், 1 கோடியே 23 இலட்சத்து 94 ஆயிரத்து 956 நில வரைபடங்கள் (Cadastral Maps-காணிப்படங்கள்) உள்ளன. அவற்றுள், 66 இலட்சத்து 60 ஆயிரத்து 226 வரைபடங்கள் (54 விழுக்காடு) கணினிமயம் ஆக்கப்பட்டுவிட்டன. நாடு முழுமையும் உள்ள 5155 பத்திரப்பதிவு அலுவலகங்களில், 4479 அலுவலகங்களில், பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயம் ஆக்கப்பட்டு உள்ளன. 87 விழுக்காடு.
(ஆ) இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில், கலக்கம், எரிச்சல் ஏற்படுத்துகின்ற, உணர்வுகளின் அடிப்படையிலான பிரச்சினைகள் எழுகின்றன. ஏராளமான ஆவணங்களை ஆய்வு செய்து கணினிமயமாக்குவது, காலத்தை விழுங்கும் பெரும்பணி. ஏனைய திட்டங்களைப் போல் அல்லாமல், இந்தத் திட்டம் கருக்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள், கூறுகளை ஆக்கும் பணிகள் முழுமை அடைவதற்கு மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கின்றது.
இந்தப் பணிகளை, கீழ்காணும் இதர பணிகளுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும்.
1. மாநிலங்களுக்கு, நடுவண் அரசு நிதி வழங்க வேண்டும்.
2. அந்தந்த மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு, திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
எனினும், போதுமான அளவு அடிப்படையான பணிகளை நிறைவு செய்து இருக்கின்றோம். உரிமைகளின் பதிவிற்காக (Record of Rights RoR), ஆவணங்களைக் கணினிமயம் ஆக்குதல், பத்திரப்பதிவு அலுவலகங்கள் மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்துகின்ற பணிகள் பெரும்பகுதி நிறைவு பெற்றுள்ளன.
அருணாசலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும், மணிப்பூர் மாநிலத்தின் ஒரு பகுதியிலும், இந்தத் திட்டப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. இங்கே, நிலங்களின் உரிமை, சமூகக் குழுக்களிடம் இருக்கின்றது. அதனால், போதுமான அளவு நிலப்பத்திர ஆவணங்கள் அரசிடம் இல்லை. மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில், சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, நிலப்பத்திர ஆவணங்களை கணினிமயம் ஆக்க வேண்டியதன் தேவை குறித்து விளக்கம் அளித்து இருக்கின்றோம். அதன்பிறகு, இந்தத் திட்டத்திற்கான களப்பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
கேள்வி இ க்கான விளக்கம்.
இணைப்பு அட்டவணை 1 மற்றும் 2 இல், விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளன.
கேள்வி ஈ க்கான விளக்கம்
இந்தத் திட்டத்திற்காக, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி விவரம்
ஆண்டு/ திட்ட மதிப்பீடு/ திருத்தப்பட்ட மதிப்பீடு/ வழங்கப்பட்டநிதி
2015-16 / 97.77 கோடி / 40.00 கோடி / 39.98 கோடி
2016-17 / 150.00 / 140.64 / 138.53
2017-18 / 150.00 / 100.00 / 97.74
2018-19 / 250.00 / 145.00 / 68.09
2019-20 / 150.00 / 50.00 / 35.83
(28.02.2020 வரை)

தேவைகளுக்கு ஏற்பவும், மாநில அரசுகள், நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும், இந்த நிதி ஒதுக்கப்படுகின்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், நிதி ஒதுக்குவதில் எந்தக் குறைபாடும் எழவில்லை என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 16-03-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment