Wednesday, March 18, 2020

பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் வைகோ, கணேசமூர்த்தி கோரிக்கை!

கொங்கு மண்டலத்தில், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் விளைநிலங்களில் பெட்ரோலியம் எண்ணெய் குழாய்கள் பதிக்கக்கூடாது; நெடுஞ்சாலைகளை ஒட்டியே கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்களும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை இன்று 18.3.2020 நாடாளுமன்ற வாளாகத்திற்குள் சந்தித்து விண்ணப்பம் அளித்தனர்.
இந்த விண்ணப்பத்தில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சுப்பராயன் அவர்களும், நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.சின்ராஜ் அவர்களும் கையெழுத்து இட்டுள்ளனர் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் 18-03-2020 அறிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment