Thursday, February 26, 2015

பிப்ரவரி 27-ல் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வைகோ வருகை!

சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த 21.06.2008 அன்று நடைபெற்ற உள் அரங்குக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசிய பேச்சு தேச துரோகம் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சென்னை 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிய விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ஆஜராவதற்காக வருகிற 27.02.2015 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக வைகோ வருகை தருகிறார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment