Saturday, February 21, 2015

உலக தாய் மொழி தின நல்வாழ்த்துக்கள் !

தாய் மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமில்லை ; தாய்மை உணர்வோடு போற்றி பயன்படுத்தப்பட வேண்டிய மொழி. அன்னை மொழி மீதான பற்று ஒவ்வொருவருக்கும் கட்டாயத்தேவை மட்டுமல்ல, அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும். தாய் மொழிதான் மனித வாழ்க்க முறையை கலாச்சாரத்தை கற்றுகொடுக்கிறது. ஓவ்வொரு மனிதனும் மிகப்பெரிய உலகம் போற்றும் தலைவர்களாக வலம் வருகின்றார்களே அவர்களெல்லாரும் தாய்மொழியின் சிறப்பை உணர்ந்து பணியாற்றினார்கள். தாய் மொழியாம் தமிழை போற்றிய திருவள்ளுவர் உலக பொதுமறையாம் திருக்குறளை நமக்கு அருளி நம் தாய் உணர்வை தீவிரபடுத்தியிருக்கின்றார். எனவே தம்முடைய தாய் மொழியாம் தமிழ் மொழியை மதித்து, தமிழை உலகறிய செய்ய உறுதி ஏற்போம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment