Wednesday, February 11, 2015

காவிரி குறுக்கே அணை, கர்நாடகத்தை கண்டித்து தஞ்சை பொதுகூட்டம்!

காவிரியாற்றின் குறுக்கே அணைகட்டி தமிழக மக்களின் வாழ்வை பாழடிக்க கர்நாடக அரசு முயல்கிறது. குறுக்கே அணை கட்டினால், தமிழகம் நீரின்றி தவிக்கும், பாலைவனமாக மாறும் அவலநிலை உருவாகும். எனவே அணை கட்ட  முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம், நாளை மாலை 6. 00 மணிக்கு தஞ்சை திலகர் திடலில் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் வைகோ எழுச்சியுரையாற்றுகிறார். பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அதனால ஏற்படும் வாழ்வாதார இழப்புகளை புரிந்துகொண்டு கர்நாடக அரசுக்கு எதிராக போராட தயாராவோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment