Thursday, February 12, 2015

காவேரி பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம், அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு! பாஜக, அதிமுக புறக்கணிப்பு!

காவேரி பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் தலைவர் வைகோ தலைமையில் தொடங்கியது. இதில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
பொதுமக்களின் நலனுக்காக போராடும் இயக்கத்தில் ஆளும் கட்சிகளான பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் கலந்துகொள்ளாமல் எப்போதும்போல மக்களின் நலனுக்காக போராடாமல் இருப்பதைபோலவே இந்த கூட்டத்துக்கும் வராமலேயே புறக்கணித்தன. இதனால் பாஜக மற்றும் அதிமுக கட்சிகளை மக்கள் அடையாளங்கண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். மக்களுக்காக எந்த பிரதிபலனுமில்லாமல் போராடுகின்ற மக்கள் தலைவர் வைகோ அவர்களை தமிழக முதல்வராக சிம்மானசத்தில் அமர்த்தி மக்கள் பலவகையான நன்மைகளை பெறவேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment