Tuesday, February 24, 2015

மேதா பட்கருடன் இணைந்து வைகோ -அன்னா ஹசாரே நாடாளுமன்ற முற்றுகை!

நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை ரத்துசெய்யக்கோரி தில்லி ஆர்பாட்டத்தில் மேதா பட்கர் அவர்களுக்கு வைகோ பெரியார் சிலையை வழங்கிய போது !
வீராங்கனையான மேதா பட்கர் அம்மையார் தலைமைத் தாங்கும் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் சார்பில், நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை ரத்துசெய்யக்கோரி இன்று (பிப்ரவரி 24) இந்திய நாடாளுமன்ற முற்றுகை அறப்போர் நடைபெற்றது.

இதில் மேதா பட்கர் அம்மையாருடன், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், சமூகப் போராளி அன்னா ஹசாரே அவர்களும் நாடாளுமன்ற முற்றுகைப்போரில் கலந்துகொண்டார்.
நாடாளுமன்ற முற்றுகைப்போரில் மதிமுக தொண்டா் படை வீரா்கள் டெல்லயில் அணிவகுப்பு மரியாதை நடத்தினர்.
மதிமுக விவசாய அணியினர், தலைவா் வைகோ தலைமையில் தமிழ் வீரா்களுடன் முற்றுகையில் ஈடுபட்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment