Friday, March 31, 2017

வைகோ நடத்திய எம்ஜிஆர் நூற்றாண்டு விழா!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் ஏற்பாட்டில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று (30.3.2017) வியாழக்கிழமை மாலை சென்னை காமராசர் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

வைகோ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நடிகை சரோஜாதேவி சிறப்புரை ஆற்றினார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.. அவர்களின் உற்ற நண்பர் பழநி ஜி.பெரியசாமி, ஏவிஎம் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பின்னணிப்பாடசி பி.சுசீலா, புலவர் புலமைப் பித்தன், ஆயிரத்தில் ஒருவன் தொடங்கி எம்.ஜி.ஆரின் 15 படங்களுக்குக் கதை வசனம் எழுதிய ஆர்.கே. சண்முகம், 28 படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர் தாஸ், முதல்வர் எம்.ஜி.ஆரின் அரசுச் செயலர்கள் வரதராஜன் ஐஏஎஸ், பிச்சாண்டி ஐஏஎஸ், சம்பத் ஐஏஎஸ், முதல்வர் எம்ஜிஆரின் தனி உதவியாளர்கள் மாணிக்கம், மணி, சங்கரசுப்பு, இராமகிருஷ்ணன், மகாலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிச் சிறப்பித்தனர்.


மு. செந்திலதிபன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 

நடிகை சரோஜாதேவி, வைகோவுக்குப் பொன்னாடை அணிவித்தார். 
இயக்குநர் ஆரூர் தாஸ், எம்ஜிஆர் முகமும் பெயரும் பொறித்த சிறப்புச் சால்வையை அணிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

எம்ஜிஆர் நுற்றாண்டு தின விழாவை கொண்டாடிய மதிமுக!

மதிமுக சார்பில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில், இன்று நான் இருவரைத்தான் தம்பி என்று அழைப்பேன் ஒருவர் யார் என்று உங்களுக்கு தெரியும் மற்றொருவர் வைகோ என கவிஞர் புலமைபித்தன் பேசினார்.

ஆனால் ஒரு புயல் இங்கு வாழ்த்துகிறது என்றால் அது வைகோ மட்டுமே எனவும் பசினார்,.

MGR பொன்னாடையை புரட்சி புயல் வைகோ அவர்களுக்கு அணிவித்து தலைவருக்கு முத்தமிட்டு உச்சி முகர்ந்தார்.ஆரூர்தாஸ்


MGR பொன்னாடையை புரட்சி புயல் வைகோ அவர்களுக்கு அணிவித்து தலைவருக்கு முத்தமிட்டு உச்சி முகர்ந்தார்.ஆரூர்தாஸ்

தலைவர் வைகோ ஓயாது உழைக்க பக்க பலமாக இருந்து வரும் தலைவரின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து உரை ஆற்றினார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

நினைத்தேன் வந்தாய் நூறு வயது.,என்ற பாடலுடன் தன் உரையை ஆரம்பித்தார் இசைக் குயில் சுசீலா. வசனகர்த்தா ஆரூர்தாஸ் இந்த நூற்றாண்டு விழாவில் சிறப்புரையாற்றினார்.

வேகத்துடன் விவேகமும் கொண்டவர் வைகோ...டாக்டர் பெரியசாமி.

நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு நினைவு தபால்தலை வெளியிட காரணமான வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவித்து தன் நினைவலைகளை பேசினார் சரோஜாதேவி

எம் ஜி ஆர் படத் தொகுப்பை தலைவர் வைகோ பார்வையிடுகிறார்...

ஓமன் மதிமுக இணையதள அணி

Thursday, March 30, 2017

எம்ஜிஆர் நூற்றாண்டில் அவரது இல்லத்தில் வைகோ!

எம்ஜிஆர் 100 ஆவது பிறந்த நாளில் இன்று 30-03-2017 அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்துவிட்டு, சென்னை இராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லம் சென்று, அவரது உருவ சிலைக்கு இன்று 30-03-2017 காலை 11 மணி அளவில் மாலை அணிவித்து நினைவலைகளை நினைவுகூர்ந்தார். உடன் மதிமுக நிர்வாகிகள், உதவியாளர் அருணகிரி ஆகியோர் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

எம்ஜிஆர் நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்திய வைகோ!

மறுமலர்ச்சி தி.மு.க. இன்று 30-03-2017 நடத்தும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினையொட்டி கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தாயகத்தில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் அண்ணா நினைவிடத்திலும், எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து நினைவு கூர்ந்தார்.

உடன் மாவட்ட செயலாளர்கள், மகளிரணியினர், கழக முன்னணி நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

புரட்சித் தலைவர் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - நூற்றாண்டு விழா.!

புரட்சித் தலைவர் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - நூற்றாண்டு விழா.

நாள் - 30.03.2017 - வியாழன் மாலை 5.00 மணி
இடம் - காமராசர் அரங்கம் - சென்னை.

விழா தலைமை - மக்கள் தலைவர் வைகோ

நிகழ்ச்சி தொகுப்பாளர் - மு. செந்திலதிபன்

சிறப்புரை - அபிநய சரஸ்வதி திருமிகு. சரோஜா தேவி

மற்றும்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பாசமிகு நண்பர் பழநி ஜி. பெரியசாமி

திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி.முத்துராமன்

இசைக் குயில் பி. சுசீலா

திருமிகு. புலவர் புலமைப் பித்தன்

திரு. ஆர்.கே. சண்முகம்

திரு. வரதராஜன் இ.ஆ.ப.,

திரு. பிச்சாண்டி இ.ஆ.ப.,

திரு. சம்பத் இ.ஆ.ப.,

திரு. மாணிக்கம், (புரட்சித் தலைவரின் தனி உதவியாளர்)

திரு. மணி (சமையல் கலைஞர்)

திரு. சங்கர சுப்பு (பாதுகாப்பு அதிகாரி)

திரு. ராமகிருஷ்ணன் (மெய்காப்பாளர்)

திரு. மகாலிங்கம் (புரட்சித் தலைவரின் தனி உதவியாளர்)

நிகழ்ச்சி ஏற்பாடு - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

அனைவரையும் வருக ! வருக !! என இருகரம் கூப்பி வரவேற்கின்றோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Wednesday, March 29, 2017

தேசிய நெடுஞ்சாலைகளில் மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்து இந்தி எழுத்துகள்! வைகோ கண்டனம்!

இந்தி மொழியைத் திணிக்கும் ஆணவ ஆதிக்கப் போக்கை எதிர்த்து, 80 ஆண்டுகளுக்கு முன்னர் மறைமலை அடிகள், தந்தை பெரியார், பசுமலை சோமசுந்தர பாரதியார், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் போராடினர்.

65 மொழிப்புரட்சியில் இந்திய இராணுவத்தால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எட்டுத் தமிழர்கள் தங்கள் மேனிக்குத் தீ வைத்துச் சாம்பல் ஆனார்கள். 1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், தமிழும், ஆங்கிலம் மட்டும்தான்; இந்திக்கு இடம் இல்லை என்ற சட்டத்தைத் தமிழகச் சட்டமன்றத்தில் எதிர்ப்பு இன்றி நிறைவேற்றினார்.

37 இல் இந்தியை ஆதரித்த மூதறிஞர் இராஜாஜி, அறுபதுகளில் ‘இந்தித் திணிப்பு நாசத்தை விளைவிக்கும்; ஆதலால் தமிழும், ஆங்கிலமும் மட்டுமே நம் மாநிலத்திற்கு ஏற்றது’ என்று சொன்னார்.

‘இந்தி பேசாத மக்கள் ஏற்றுக் கொள்ளாதவரை இந்தியைத் திணிக்க மாட்டோம்’ என்று, நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் உறுதிமொழி அளித்தார்.

பல தேசிய இனங்கள், பல மொழிகள், பல சமயங்கள், பல பண்பாடு பழக்கவழக்கங்களைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில், அப்பன்முகத்தன்மையைச் அழித்தொழித்து, ‘இந்தி - இந்து ராஷ்டிரா’ நாடாக்கி விடும் என்ற மூர்க்கத்தனமான வெறியுடன், இந்துத்துவ சக்திகளின் ஏவுதலால் இயங்கும் நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகின்றது.

‘இந்தப் போக்கு இந்தியாவின் ஒருமைப்பாட்டை உடைத்து எறியும்’ என நாட்டின் எதிர்கால நலனைக் கருதி, வங்கத்து மொழி அறிஞர் சுனித்குமார் சட்டர்ஜி உள்ளிட்ட மேதைகள் எச்சரித்தும், மத்திய அரசு அண்மைக்கானலமாக அதிகார மமதையில் அக்கிரமம் செய்கின்றது.

தமிழ்நாட்டின் வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் கடந்த சில மாதங்களாக ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு இந்தியை வரைகிறார்கள். தேசிய நெடுஞ்சாலை 75, 77 எனும் இச்சாலைகள், வேலூர், திருவண்ணாமலை வழியாகச் செல்லும் வழியில் தற்போது இந்தி, தமிழ் அல்லது கன்னட எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. ஆங்கில எழுத்துகள் அகற்றப்பட்டுவிட்டன. 533 கிலோ மீட்டர் தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலை 75, கர்நாடகாவில் பந்த்வா என்ற இடத்தில் தொடங்கி வேலூர் வரை வருகின்ற 73 ஆவது சாலையில் இணைகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை முதல், சித்தூர், வேலூர் நெடுஞ்சாலையில் ஆங்கில எழுத்துகள் அழிக்கப்பட்டு, இந்தி எழுதப்படுகின்றது.

சுற்றுலாப் பயணிகளும், வணிகர்களும் வடகிழக்கு மாகாணங்களில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக வருகின்ற மக்களும் இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர். வேலூரில் உள்ள தோல் தொழிற்சாலை அதிபர்கள், ஆங்கிலத்தை அகற்றியது தங்களை மிகவும் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளனர். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்ட பிற மாநிலத்தவர்களும்கூட இதனால் பாதிக்கப்படுவதாகக் கூறி இருக்கின்றனர்.

வீரமும் தியாகமும் நிறைந்த போராட்டத்தால் தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட்ட இந்தியை இங்கே மீண்டும் திணிப்பதற்குப் புதிதாகச் சிலர் புறப்பட்டு இருக்கின்றார்கள். இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற கவைக்கு உதவாத, உண்மை இல்லாத வாதத்தை வைக்கின்றார்கள்.

தமிழகத்தின் கல்வித்துறையில், நீதி, நிர்வாகத் துறைகளில் தமிழ் முதல் இடம் பெற வேண்டும்; ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்க வேண்டும். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஆங்கிலம்தான் ஆட்சி மொழி. இங்கு வாழும் ஆங்கிலோ இந்தியர்களின் தாய்மொழி ஆங்கிலம்தான்.

ஆங்கிலப் படிப்புதான் தமிழகத்து இளைஞர்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

‘திராவிட இயக்கம் நலிந்தது; இனி அழியும்; அதன் சகாப்தம் முடிந்துவிடும்’ என்று சிலரின் ஊளைச்சத்தம் பலமாகக் கேட்கின்றது.

ஒரே மதத்தைப் பின்பற்றிய பாகிஸ்தான், உருது மொழித் திணிப்பால் வங்காள தேசம் என்ற நாட்டை உருவாக்கிற்று. ஒரே மதத்தைப் பின்பற்றுகின்ற எண்ணற்ற சின்னஞ்சிறு நாடுகள் மொழி ஆதிக்கத்தால் தனித்தனி நாடுகளாக ஆகிவிட்டன. அயர்லாந்து தனி நாடாக ஆனதற்குக் காரணமே மொழித்திணிப்புதான்.

‘தமிழ்நாட்டில் கோட்டைக் கதவுகள் இல்லை; திறந்து கிடக்கின்றது; கேள்வி கேட்பார் இல்லை; உள்ளே நுழைந்துவிடலாம்; இந்து ராஷ்டிரத்தை நிறுவிடலாம்’ என்று திட்டம் வகுப்பவர்களின் பகல் கனவு பலிக்காது.

மத்திய அரசு இந்தப் போக்கைக் கைவிடாவிடில், கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Tuesday, March 28, 2017

டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்குமாறு, பிரதமருக்கு வைகோ கடிதம்!

இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (28.3.2017) எழுதியுள்ள கடிதம்:


“அன்புள்ள திரு நரேந்திர மோடி அவர்களுக்கு, 

வணக்கம்.

பொருள்: தில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகளின் அமைதிவழி அறப்போராட்டம்- பிரதமர் சந்திக்க வேண்டுதல். 

தமிழக விவசாயிகளின் துயரநிலை குறித்துத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன். 

பருவமழை பொய்த்ததாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்ததாலும், வேளாண் செலவினங்களின் கடுமையான உயர்வு மற்றும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும், தாங்க முடியாத மனவேதனையால், கடந்த 12 மாதங்களில் 400 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மடிந்துள்ளனர். 

திரு அய்யாக்கண்ணு அவர்கள் தலைமையில், எந்தக் கட்சியையும் சாராத நூற்றுக்கணக்கான விவசாயிகள் தில்லிக்கு வந்து, இடுப்பில் அரையாடையுடன் கடந்த 14 நாள்களாக ஜந்தர் மந்தரில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவும் பகலும் சாலையிலேயே படுத்துக் கிடக்கின்றனர். தமிழகத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து மடிந்த விவசாயிகளின் மண்டை ஓடுகளை அவர்கள் எடுத்து வந்துள்ளனர். திருச்சி நீதிமன்றதில் ஒரு முன்னணி வழக்குரைஞரான திரு அய்யாக்கண்ணு அவர்கள், தனது வழக்கறிஞர் தொழிலைத் துறந்துவிட்டு, கடந்த 17 ஆண்டுகளாக முழுநேரமும் விவசாயிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டு வருகின்றார்.

தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியைச் சமாளிக்கத் தமிழக அரசு ரூ.39,565 கோடி நிதி உதவி கோரியது. ஆனால், அதிர்ச்சி அளிக்கின்ற விதத்தில், மத்திய அரசு வெறும் ரூ. 1658 கோடி மட்டுமே ஒதுக்கி இருக்கின்றது. அதுவும், அடுத்த வேளாண்மைக்கான இடுபொருள்களை வழங்குவதற்காக மட்டுமே இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்வோம் எனத் தாங்கள் வாக்குறுதி அளித்தீர்கள். 

தற்போது விவசாயிகள் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:

1. நாட்டு உடைமை ஆக்கப்பட்ட அனைத்து வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி.

2. வறட்சி நிவாரணப் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு

3. உச்சநீதிமன்ற ஆணையின்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் அறிவித்தபடி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.

4. 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்கள் அளித்த உறுதிமொழியின்படி, தென்னக நதிகள் இணைபிற்கான பணிகளை முன்னெடுத்தல்.

கோடிக்கணக்கான தமிழக விவசாயிகளின் வேதனைகளைத்தான் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்ற 200 விவசாயிகள் எதிரொலித்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தங்களைச் சந்தித்துத் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க விழைகின்றனர்.

தாங்கள் நேரம் ஒதுக்கி அவர்களைச் சந்தித்தால், தமிழகத்தின் கோடிக்கணக்கான விவசாயிகள் தங்களுக்கு நன்றி பாராட்டுவார்கள்.

மிக்க நன்றி.”

வைகோ அவர்கள் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
28.03.2017

Dear Shri Narendra Modi ji,

Sub: Peaceful agitation of farmers of Tamilnadu at Jantar Mantar - 
Requesting an appointment for farmers with Hon’ble PM - Reg.

Vanakkam. May I draw your immediate kind attention to the following important matter about the plight of farmers who are committing suicide in Tamilnadu. Due to the failure of monsoon, adamant denial of Karnataka Government despite the orders of the Supreme Court to release water in Cauvery, high cost of cultivation, meagre price of the produce, about 400 farmers in Tamilnadu have committed suicide over a period of 12 months. Unbearable heavy burden of loans agonised them to commit suicide.

Under the leadership of Mr. Ayyakkannu, hundreds of farmers, not belonging to any political party, have come to Delhi and launched a peaceful protest at Jantar Mantar wearing clothes to hide their waist and lying on the road day and night for the past of 14 days. They have brought the skulls of the dead farmers to demonstrate that thousands of farmers would commit suicide if the debts are not waived.

Mr. Ayyakkannu, a lawyer who had roaring practice in Trichy Bar has given up his legal profession and dedicated himself for the cause of the suffering farmers for the past 17 years.

The Tamilnadu Government demanded the Central Government to provide 39,565 crores for drought relief. But to our shock, only 1658 crores has been allotted by the Central Government, that too for the purpose of providing inputs for future cultivation.

Your goodself declared an assurance in Uttar Pradesh that all the debts of the farmers would be written off. 

The genuine demands of the farmers are as follows:

1. All the debts of the farmers from nationalised banks and co-operative banks should be written-off.

2. Adequate funds should be provided for drought relief by the Union Government.

3. The Cauvery Management Board should be constituted as per the direction of the Cauvery Water Tribunal and also by the Supreme Court of India.

4. Steps should be initiated for the linking of rivers in the southern peninsula as you made an assurance during the 2014 Lok Sabha elections.

The 200 farmers represent the pain and sorrow of millions of farmers of Tamilnadu.

They are longing to get an opportunity to meet you and place their demands.

With all sincerity I would request you to kindly give an appointment to the representatives of the agitating farmers as early as possible for which crores and crores of farmers will be thankful to you.

With warm regards, 

Yours sincerely,
(Vaiko)

Hon’ble Shri Narendra Modi,
Prime Minister,
Government of India,
New Delhi


மேற்க்கண்டவாறு தகவல் அறிக்கையை கடிதமாக வைகோ பிரதமருக்கு எழுதியுள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, March 27, 2017

இஸ்திரி பார்த்தசாரதி மறைவுக்கு வைகோ அஞ்சலி!

வடசென்னை கிழக்கு மாவட்டம், எழும்பூர் பகுதி, 102 வட்ட துணை செயலாளர் இஸ்திரி பார்த்தசாரதி அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு மக்கள் தலைவர் வைகோ இன்று 27-03-2017 மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உடன் மாவட்ட செயலாளர்கள், கழக முன்னணி தலைவர்கள் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை முன்வைத்து, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களுடன் வைகோ சந்திப்பு!

2017 மார்ச் 26 இரவு 9 மணி அளவில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அவர்களை, அவரது இல்லத்தில் வைகோ அவர்கள் சந்தித்தார்.

முக்கியமான நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றுடன் 13 ஆவது நாளக, தில்லி ஜந்தர் மந்தரில் கட்சி சார்பு அற்ற முறையில் தமிழக விவசாயிகள்நடத்தி வருகின்ற அறப்போராட்டத்தைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.

“‘இந்தியாவின் தந்தை’ எனப் போற்றப்படும் உத்தமர் காந்தி அடிகள் இடுப்பில் அரை ஆடையே அணிந்தார். அதனால் அவரை ஒரு ‘அரை நிர்வாணப் பக்கிரி’ என்று வின்ஸ்டன் சர்ச்சில் வர்ணித்தார். காந்தி அடிகளின் வழியில், தமிழக விவசாயிகள் இடுப்பில் மட்டுமே அரை ஆடை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில், நானூறு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அப்படி உயிர் நீத்த விவசாயிகளின் மண்டை ஓடுகளைக் கொண்டுவந்து தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டு விவசாயிகள் போராடுகின்றனர். கடுமையான வறட்சியினால் தமிழகத்தில் டெல்டா பகுதியில் மட்டும் 29 இலட்சம் ஏக்கர் பாசனம் இழந்துவிட்டது. மொத்தத்தில் ஒரு கோடி ஏக்கர் விவசாயம் பாழாகிவிட்டது.

நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழகத்திற்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. கர்நாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன. ‘காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையைக் கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.

தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான வறட்சியைச் சமாளிக்க ரூ 39,565 கோடி தேவை என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் மத்திய அரசு வெறும் 1698 கோடியே 45 இலட்சம் மட்டுமே ஒதுக்கி உள்ளது. அதுவும்கூட அடுத்த பயிரீட்டுக்கு தேவையான இடுபொருட்களை வாங்குவதற்கு என்று அறிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், வரலாறு காணாத அளவிற்குத் தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயலால் விளைந்த பெரும் சேதத்தை ஈடுகட்டுவதற்காகவும், மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் தமிழக அரசு கோரிய அளவிற்குப் போதுமான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.

கோடிக்கணக்கான தமிழக விவசாயிகளின் சார்பில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். திருச்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் அய்யாக்கண்ணு அவர்கள், தமிழகத்தில் இருந்து விவசாயிகளைத் திரட்டிக் கொண்டு வந்து இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டு இருக்கின்றார்.

இப்போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகள் பின்வருமாறு,

1. தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளிடம் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

2. தமிழ்நாடு அரசு கோரிய வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

3. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்.

4. தென்னக நதிகள் இணைப்புக்கு உடனே நடவடிக்கை வேண்டும்.

தமிழகம் தொடர்ந்து மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதால், தமிழக விவசாயிகள் இடையே மத்திய அரசு மீது வெறுப்பும் வேதனையும் ஏற்பட்டு இருக்கின்றது.

எனவே, வறட்சி நிவாரணப் பணிகளுக்குக் கூடுதல் நிதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். போராட்டம் நடத்தி வருகின்ற விவசாயிகளின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலனை செய்து, விவசாயிகளின் பட்டினிப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி,”
வைகோ அவர்கள் தமது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, March 26, 2017

உடல்நலம் பாதிக்கப்பட்ட திரு.ராம்ஜெத்மலானி அவர்களுடன் வைகோ சந்திப்பு!

இன்று 26-03-2017 டெல்லியில், உடல்நலம் பாதிக்கப்பட்ட திரு.ராம்ஜெத்மலானி அவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். 

அப்போது பேசிய ராம்ஜெத் மலானி அவர்கள், தான் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவித்தார் என தெரிவித்தது குறிப்பிப்டதக்கது.

ஓமன் இணையதள அணி