Monday, August 8, 2016

90 வயதை கடந்து கொள்கை மாறாத திரு ஜெயராமன்!

நேற்று 07-08-2016 நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட மதிமுக செயல்வீரர் கூட்டத்தில் மறுமலர்ச்சி திமுக மூத்த உறுப்பினர் திரு.ஜெயராமன் அவர்கள் 90 வயது கடந்தபோதும் அவர் மாதாமாதம் தரும் கட்சி நிதியை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கொடுத்து வருகிறார். 

மற்றும் கட்சி சாரா பொதுமக்களிடம் வசூல் செய்த பணம் அனைத்தையும் தலைவர் வைகோ அவர்களிடம் ஒப்படைத்தார். இதை பார்த்த தலைவர் கண்கள் குளமாயின. எத்தனை கோடி வாங்கினார் உங்கள் தலைவர் என கேட்கும் மக்கள் மத்தியில் இதுபோன்ற தொண்டன் உள்ளவரையில் மறுமலர்ச்சி திமுகவை எவராலும் அழிக்க முடியாது. அதற்கு இதுவே சாட்சி. மிக நெகிழ்ச்சி தருணம். இந்த செய்தி வருகிற சங்கொலியில் பதிவு செய்யப்படும் என தலைவர் உறுதி அளித்தார். 

கொள்கை வேளம் திரு.ஜெயராமன் அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துதலையும் நன்றியையும் தெர்வித்துக்கொள்கிறோம்.

தகவல்: ராஜசேகர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment