Tuesday, August 30, 2016

தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த வைகோ கோரிக்கை!

இந்தியாவின் புகழ் வாய்ந்த மருத்துவ நிறுவனங்களுள் ஒன்றான எய்ம்ஸ் மருத்துவமனை, (All India Institute of Medical Sciences) தமிழகத்திலும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்தத் திட்டத்திற்கான தமிழக அரசின் வரைவு அறிக்கை, 2015 மே மாதம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முதல் கட்டமாக 1500 முதல் 1800 கோடி வரையிலும் நிதி ஒதுக்கப்படலாம் எனத் தெரிகின்றது. இந்த மருத்துவமனையால் தமிழக மக்கள் பயன் அடைவர். எனவே, இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி, தமிழக முதல் அமைச்சர் மத்திய அரசுக்குக் கடிதமும் எழுதினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு, இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைய உள்ளன. அவற்றை அமைப்பதற்கான வேலைகள் அம்மாநிலங்களுள் விரைவாக நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகத் தெரிகின்றது.

ஆனால் தமிழ்நாட்டில் அதற்கான பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை. எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டுமெனத் தமிழக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்துகின்றேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment