Saturday, August 27, 2016

புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் சார்பில் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து, இன்று 27.08.2016 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு சென்னை - மத்திய சுங்கத்துறை அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமை தாங்கினார். மாணவர் அணி மாநிலச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், மாணவர் மன்ற மாநில அமைப்பாளர் பால.சசிகுமார் முன்னிலை வகித்தனர்.

மாவட்டச் செயலாளர்கள் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், கே.கழககுமார், வழக்கறிஞர் ப.சுப்பிரமணி, டி.சி.இராஜேந்திரன், ஆர்.இ.பார்த்திபன், இ.வளையாபதி, மா.வை. மகேந்திரன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பூவை மு.பாபு, தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன், சிறுபான்மை பிரிவுச் செயலாளர் முராத்புகாரி, ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் பூவை து.கந்தன், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் காரை செல்வராஜ், சொற்பொழிவாளர் ஆலந்தூர் எஸ்.டி.செல்வராஜ், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் சு.நவநீதகிருஷ்ணன், பகுதிச் செயலாளர்கள் துறைமுகம் நாசர், தென்றல் நிசார் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள் சென்னை மண்டலம் வி.சேஷன், காஞ்சி மண்டலம் துரை.மணிவண்ணன், வேலூர் மண்டலம் பாசறை பாபு, திருப்பூர் மண்டலம் சு.கோவிந்தராசு, திருச்சி மண்டலம் க.மணிவண்ணன், தஞ்சை மண்டலம் ப.த.ஆசைத்தம்பி, விழுப்புரம் மண்டலம் இராச.எழிலன், கௌ.மகேஷ்சங்கர், இரா.சத்தியகுமாரன், முகவை இரா.சங்கர், மாவட்ட அமைப்பாளர்கள் மு.மாயன், ச.ராஜசோழன், அருணாசலம், ஈகை ஜி.சிவா, விருதுநகர் மதியழகன், தேனி கமலக்கண்ணன், மதுரை மாநகர் புகழ்முருகன், எஸ்.தாணு, மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் தமிழ்அருண், சிலம்பரசன், பவுன்ராஜ், பிரசாந்த், திலீபன், சுமங்கலி நந்தா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

செய்தி: மணவை தமிழ் மாணிக்கம்

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment