Thursday, December 31, 2015

மழை சேத நிவாரணம் வழங்க கோரி, வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நலக் கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

மக்கள் நலக் கூட்டணியின் மழை வெள்ள சேத நிவாரணம் குறித்த கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் நலக் கூட்டணி சார்பில் மக்கள் தலைவர் வைகோ தலைமையில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று 31-12-2015 காலை 11 மணி அளவில் வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றது. இதில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான, ஒருங்கிணைப்பாளர் வைகோ, தொல் திருமாவளவன், முத்தரசன், மார்க்கிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் பிரதிநிதி வெங்கட்ராமன் ஆகியோரும், கூட்டணி கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பெருமழை வருமென்று வானிலை மையம் எச்சரித்தும், அலட்சியமாக செயல்பட்ட அதிமுக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்!

குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றிடு, சுகாதார பணிகளை முன்னெடு,முன்னெடு!

என்பன போன்ற ஆர்ப்பாட்ட முழக்கங்களை தொல் திருமாவளவன் முன் சொல்ல கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியது.

ஆர்ப்பாட்ட மேடையில் தலைவர்கள் வந்தார்கள், அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் அவர்கள், ஐயாவும், அம்மாவும் சுகமாக இருக்கிறார்கள், மக்கள்தான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்றார். அநியாயம், அக்கிரமத்தை முடிவு கட்டுவதற்காக மக்கள் நலக்கூட்டணி உருவாகி இருக்கிறது.

மதுரை உயர்நீதிமன்றம் ஆக்கிரமைப்பை எதிர்த்து உத்தரவிடுகிறது தான் ஆக்ரமிப்பின் மீதே இருந்து கொண்டிருக்கிறதை அறியாமல் என பேசினார் முத்தரசன். மேலும், மற்ற கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களை கணக்கெடுக்கிறீர்களே ஆண்ட ஆளும் கட்சிகளே, மக்கள் உங்கள் மேல் அதிருப்தியில் உள்ளார்கள் என்பதை முதலில் உணருங்கள் என சுளீர் என பேசினார்.

தொல் திருமாவளவன் பேசுகையில், தன் கட்சியிலேயே தான் சிறப்பாக செயல்படுகிறோம் என்று தனக்கு தானே பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது வேடிக்கையாக இருக்கிறது என அதிமுக அரசை கடிந்தார். மக்களை விலைக்கு வாங்க முடியும் என்ற இறுமாப்பிலேயே முதல்வர் இருக்கிறார். அவர் என்ன, அண்ணன் வைகோ மாதிரி சேறு சகதிகளில் இறங்கி மக்கள் கைகளை பிடித்து ஆறுதல் கூறினாரா என அரசுக்கு உச்சியில் அடித்தார் போல பேசினார் திருமாவளவன்.

ஒரு ஓட்டுக்கே 1000 ரூபாய் கொடுக்கிற அம்மா என்று சொல்லும் நீங்கள், ஏக்கருக்கே 5000 கொடுப்பதுதான் வெள்ள நிவாரணமா எனவும் கேள்வி எழுப்பினார்.

ஒரு ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்து வீட்டை கட்டுபவன்தான் உண்மையான ஆக்கிரமிப்பாளன். .வாழ்க்கைக்காக கூவம் ஓரம் இருப்பவன் அல்ல ஆக்கிரமிப்பாளன் என தெரிவித்தார் திருமாவளவன்.

மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் ஆர்ப்பாட்ட கண்டன உரை நிகழ்த்துகையில்,
மக்கள் வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்டு, உணவில்லாமல், உடை இழந்து பரதேசியால் அலைந்துகொண்டிருந்த வேளையில், முதலமைச்சர் அவர்களே நீங்கள் எங்கே இருந்தீர்கள். வேறு கிரகத்திற்கு வாசம் செய்ய போயிருந்தீர்களா, மெளன நிலையில் இருந்தீர்களா என கேள்வி எழுப்பினார்.

வேண்டா வெறுப்பாக வாகனத்தில் வந்து உள்ளேயே இருந்து, வாக்களித்த மக்களின் பகுதி என்று கூட பராமல், கீழிறங்கு அந்த மண்ணில் கால் வைக்க கூட மனமில்லாமல் வாகனத்தின் உள்ளேயே இருந்துகொண்டு, தேர்தல் கனவிலே இருந்ததால் வாக்காள பெருமக்களே என்று கூறி, ஒரு கேலிக்குரிய பொருளாகவே உங்களை ஆக்கிக்கொண்டு போனீர்கள். பால்கார்ர் பால் போடுகிற வேகம் மாதிரி ஓட்டுக்கு 1000 வீதம் ஒவ்வொரு வீட்டிற்கும் வேகமாக கொடுத்தீர்களே, அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு இந்த அரசாங்கத்திலே, துன்பத்தில் தவிக்கிற மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை உங்களால் செய்ய முடிந்த்தா எனவும் கேள்வி எழுப்பினார் வைகோ.

எனவே மக்களே, இதற்கு பிறகு அமையப்போகும் அரசு, கூட்டணி அரசு. தமிழக இதுவரை கண்டிராத காட்சி நடைபெற இருக்கிறது. நாட்டு மக்களே நாங்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறோம். கூட்டணியின் நான்கு கட்சிகளின் தலைவர்கள் கரைபடியாத கரங்களை கொண்டவர்கள். நாங்கள் காசற்றவர்கள், மாசற்றவர்கள், கொள்கையாளர்கள், அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள் நாங்கள் ஒன்றாக இனைந்திருக்கிறோம் என கூட்டணி ஒற்றுமையை எடுத்து கூறினார். தடுப்புகளும், கடிவாளங்களும் கொண்டதுதான் கூட்டணி அரசு.

சமூக வலைதளத்தில் இயங்கும் தம்பிமார்களுக்கு சொல்லுகிறேன். உங்கள் வந்து உதவினீர்கள். உங்களில் ஈரம் இருக்கிறது என்பதை நீங்கள் எடுத்துக்காட்டியுள்ளீர்கள். எனவே எங்களுக்கு நீங்கள்தான் வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி கொடுக்க முடியும் என இணையத்தில் இயங்குகின்றவர்களிடம் வைகோ வேண்டுகோள் வைத்தார்.

தாய்மார்கள் கண்ணீருடன் கதறுகிறார்களே அந்த மதுக்கடையை அகற்ற மக்கள் நலக் கூட்டணியை தவிர யாருக்கும் அந்த தகுதி கிடையாது. ஜெயலலிதாவை கொலைகார அரசு என்று குற்றம் சாட்டியவர்கள் நாங்கள். சசிபெருமாளை கொன்றவர்கள் நீங்கள் அதிமுக அரசு. ஆனால் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்குகிற இயக்கம்தான் மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற அமைப்பாக உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி என்றார்.

ஒவ்வொரு சிறுத்தையும், செங்கொடி தோழர்களும், கழகத்தின் கண்மணிகளும் ஆயிரம் பேர்களுக்கு சம்ம் என்றெண்ணி நாம் களத்துக்கு செல்வோம். ஜனவரி 26 ல் மதுரைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்து நிறைவு செய்தார் வைகோ.

செய்தி: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Wednesday, December 30, 2015

தமிழண்ணல் மறைவிற்கு வைகோ இரங்கல்!

தமிழ் மரபையும் பண்பாடுகளையும் பேணிக் காத்து வருகின்ற செட்டிநாட்டில் பிறந்து, வ.சுப. மாணிக்கனார் போன்ற அறிஞர் பெருமக்களிடம் பயின்று, தமிழ் கூறும் நல்லுலகில் தமிழ் அண்ணலாகத் தன்னிகர் அற்ற பணிகள் செய்த மூத்த தமிழ் அறிஞர், நேற்று மறைந்துள்ளார்.

‘தமிழ்ச் சான்றோர் பேரவை’ போன்ற அமைப்புகளை உருவாக்கி, தமிழைப் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் பேணிட வேண்டும் எனக் காலமெல்லாம் போராடியவர்.

திரு வி.க. விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது,செம்மொழி விருது போன்ற தகுதியான விருதுகளை மிகுதியாகப் பெற்றவர்.

சங்கம் வளர்த்த மதுரையில் தியாகராசர் கல்லூரியிலும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி, ஒப்பற்ற பணிகளை ஆற்றியவர்.
வாழையடி வாழையென வளரும் தமிழ் அறிஞர் பெருமக்களைத் தம் வழிமரபில் உருவாக்கிய பெருமகனார்.

சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றின் மீது எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளையும் ஆய்வு நூல்களையும் எழுதியவர்.

கட்டுரை இலக்கியம், கவிதை, சிறுகதை என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். ‘மெல்லத் தமிழ் இனி வெல்லும்’ என்று சொல்லும் வகையில், மரபுத் தமிழ் சார்ந்த ஆய்வுகளையும், புதுப்புதுக் கோணங்களில் கருத்து அரங்குகளையும் வழிநடத்தியவர்.

அப்பெருமகனாருடன் பல நிகழ்வுகளில் பங்கேற்று இருக்கின்றேன். பலமுறை சந்தித்து உரையாடி, அரியக் கருத்துகளை கேட்டு மகிழ்ந்திருக்கின்றேன்.

தமிழ் உள்ளவரையில் வாழும் ஒப்பற்ற தமிழ் அறிஞர் தமிழ் அண்ணல் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் மாணாக்கர்களுக்கும், தமிழ் கூறும் நல்லுலகிற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தனது இரங்கலில் வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

சிவகாசி - சித்துராஜபுரத்தில் சாதி மோதலைத் தடுத்த வைகோ!

சிவகாசி - சித்துராஜபுரத்தில் ம.தி.மு.க. தீவிரத் தொண்டர் கோவிந்தராஜ் நேற்று 29.12.2015 இரவு சில ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனை அறிந்த மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று காலை சித்துராஜபுரத்திற்கு வந்து படுகொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் ஆறுதல் கூறினார்.

வைகோவைக் கண்டதும், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் திரண்டு வந்து கதறி அழுதனர். அங்கு கொந்தளிப்பான நிலை காணப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டுக்கொண்டே இருந்தார்கள். வைகோ அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

கொலைக் குற்றவாளியான ராமேஷ் பாண்டியன் சித்தி முத்துலட்சுமி கூட்டத்திலிருந்து ஓடிவந்து வைகோவை கட்டிச் சேர்ந்து பிடித்து, நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்னைக் காப்பாத்துங்க ஐயா, என்னைக் காப்பதுங்க ஐயா என்று கதறி அழுதுகொண்டே இருந்தார். வைகோவோடு வந்த முன்னணியினரும், தோழர்களும் சுற்றிலும் அரண் அமைத்து நின்றனர். கூட்டமோ கொந்தளித்துக்கொண்டு இருந்தது.

குற்றவாளிதான் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, கொலையில் சம்மந்தம் இல்லாத அவரது தாயாரோ, சித்தியோ தண்டிக்கப்படக் கூடாது என்ற உணர்வோடு, அங்கு முகாமிட்டிருந்த மாவட்ட கால்வதுறை அதிகாரி அரவிந்தன் அவர்களுக்கு அனுப்பி, காவல்துறை வாகனத்தை வரவழைத்து, அதில் முத்துலட்சுமியை பாதுகாப்பாக ஏற்றி அனுப்பி வைத்தார் வைகோ.

இது இரண்டு சமுதாயங்களுக்கு இடையில் நடக்கும் மோதல், அல்ல. தனிப்பட்ட சில ரவுடிகளின் செயல்தான் என்றும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இதை சாதி மோதலாக மாற்ற முயற்சிக்கும் சமூக விரோத சக்திகளிடம் இரு சமூக மக்களும் சிக்கிக்கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வைகோ உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

அடைக்கலமாக வந்த குற்றச் செயலில் ஈடுபடாத முத்துச் செல்வியை கொந்தளித்து நின்ற கூட்டத்தினரிடம் சிக்கி உயிரிழப்புக்கு ஆளாகாமல் பாதுகாத்ததோடு, சாதி மோதலுக்கு வழி வகுக்காமல் நல்லிணக்கம் நிலவ வலியுறுத்திய வைகோ அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழ் நாடு தேவர் பேரவையின் மாநில இணைப் பொதுச்செயலாளர் கே.என்.கே.சங்கரநாராயணன் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

அண்ணா அருமை அண்ணா நூலை வைகோ வெளியிட்டு சிறப்புரை!

29-12-2015 செவ்வாய் மாலை 6 மணிக்கு இராணி சீதை மன்றத்தில் "அண்ணா அருமை அண்ணா" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் தலைவர் வைகோ சரியாக வருகை தந்தார். பின்னர் வருகை தந்த தோழர் தா.பாண்டியன் அவர்களை வரவேற்றார். இதில் கண்ணதாசன் பதிப்பகத்தார் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நூல் பரிசளித்தனர்.

“அண்ணா அருமை அண்ணா” என்ற நூலை, மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ அவர்கள் வெளியிட முன்னாள் அமைச்சர் ஹண்டே அவர்கள் பெற்று கொண்டார்கள். அறிஞர் அண்ணா குடும்பத்தாருக்கு தமிழின முதல்வர் வைகோ மற்றும் ஜி.விஸ்வநாதன் அவர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் அவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் தலைமையுரை நிகழ்த்தினார்கள். அறிஞர் என்றால் அது அண்ணா மட்டுமே என இரா.செழியன் உரை நிகழ்த்தினார்.

உரை நிகழ்த்திய ஹண்டே அவர்கள், பொறாமை என்றால் என்னவென்றே தெரியாதவர் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் தம்பிக்கு எழுதிய கடிதங்களின் நகலை நூலகத்தில் பாதுகாக்க திரு.ஜி.வி அவர்களிடம் வழங்கினார் திரு.ஹண்டே அவர்கள். இந்த கடித தொகுப்பு திரு.புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரிடம் அண்ணா அவர்களின் நண்பர் கொடுத்தாராம் என்றார்.

அண்ணா உழைக்கத்தான் அழைத்தார் தம்பி வா என்று, பிழைக்க அல்ல என முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் பேசினார்.

அரசியல் ரீதியாக எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அறிஞர் அண்ணா அவர்களின் பொதுக்கூட்டங்களையும் கட்டுரைகளையும் தவறவிடுவதில்லை. குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கிலேயே அவைகளை கவனிப்பேன் என மனம் திறந்து பேசினார் தா.பாண்டியன்.

பாஜக தலைவர் இல.கணேசன் அவர்கள் விழாவிற்கு வருகைதந்த்தையொட்டி, தலைவர் வைகோ அவர்கள், கைக்கூப்பி வரவேற்றார். காங்கிரஸ் எம்.கிருஷ்ணசாமி பேசும்போது, எல்லா பெருமையும் பெற்ற அறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது ஏன் தரவில்லை என தெரியவில்லை என கூறினார்.

நூல் ஆசிரியர் ஜி.விஸ்வநாதன் அவர்கள் தனது ஏற்புரையில், அரசியல் தீண்டாமையை தமிழ்நாட்டில் இல்லாமல் ஆக்கியது அறிஞர் அண்ணா அவர்களின் பெருமை என பேசினார்.

பின்னர் வைகோ அவர்கள் பேச வந்தார். அவர் இந்த நிகழ்சிக்கு வரும்போதே, வைகோ அவர்களை வரவேற்று ஒரு பதாகை நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்தின் வெளியிலே கழகத் தோழர்களால் வைக்கப்பட்டிருந்தது. தலைவர் மண்டபத்தினுள்ளே நுழையும் போதே அதை பார்த்துவிட்டு அதை உடனே அகற்றச் சொன்னார். பிறகு விழா ஏற்பாட்டார்களை பார்த்து தவறு நேர்ந்து விட்ட்து. மன்னித்து கொள்ளுங்கள் என்றும் கேட்டு கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசும்போதும், தனது உரையில் இது பற்றி குறிப்பிட்டார். எங்கு பெயர் வரும். எப்படி எல்லாம் விளம்பரபடுத்தலாம் என நினைக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் அண்ணா அவர்களை பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் தன்னை முன்னிலைபடுத்திய பதாகையை கூட அகற்றச் சொன்ன தமிழின முதல்வர் வைகோ அவர்களின் மனப்பக்குவம் அளப்பரியது.

தலைவர் வைகோ அவர்கள் பேசும்போது, மதிமுகவின் அதிகாரபூர்வ ஏடான சங்கொலியின் முன்னாள் பொறுப்பு ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய திராவிட இயக்க வரலாற்று நூலை குறிப்பிட்டு பேசினார். இந்த உலகத்தில் அண்ணாவின் தம்பிகள் நாங்கள் என்று சொல்லி கொள்வதில் பெருமை படுகிறோம். பேரறிஞர் அண்ணா கண்ட நேர்மை, எளிமை எங்கே. அரசியல் நாகரீகம் எங்கே. என அறைகூவல் விடுத்தார். அண்ணாவே உயர்ந்த தலைவர். அவர் வழியிலே நாங்கள் என தன் இடிமுழக்கத்தை நிறைவு செய்தார் தலைவர் வைகோ.

உணர்வான தலைவரின் பேச்சை பாராட்டினார்கள் பொதுமக்கள்.

அந்த நேரத்தில், சங்கொலியின் முன்னாள் பொறுப்பாசிரியர் திரு.க.திரு நாவுக்கரசு மற்றும் அய்யா சேதுராமன் அவர்களையும் சந்தித்து உரையாடினார்  தமிழின முதல்வர் வைகோ.

செய்தி சேகரிப்பு: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்

ஓமன் மதிமுக இணையதள அணி