Monday, December 7, 2015

மழை நீரால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ₹68000 கொடையளித்த உணர்வாளர்கள்!

உண்ண உணவின்றியும், உடுத்த உடையின்றியும் தமிழீழ அகதிகள் அன்று தமிழகம் வர தமிழர் அடைக்கலம் கொடுத்தார்கள். ஆனால் இன்றைய நிலை, தமிழக மக்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டு, சாலைகளில் அகதிகளாக அலைந்து திரிகிறார்கள். குழந்தைகள் பசியால் துடிக்கிறார்கள். அன்றாடம் வாழ்க்கை வாழ வசதியில்லாமல் துன்புறுகிறார்கள். தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும் தமிழர்கள் படுகின்ற துயர காட்சிகளை பார்க்கும்போது, எங்கள் தமிழ் உறவுகளை எண்ணி நாங்கள் வேதனைப்படுகிறோம்.

நிவாரணங்கள் சரியாக கிடைக்காமல் துயரப்படுகிற செய்திகள் மனதை ரணமாக்குகின்றன. அதிமுக அரசோ ஜெயலலிதா தாங்கிய படத்துடன்தான் உணவை கூட கொடுப்பது மிகுந்த மன வலியை ஏற்ப்படுத்துகிறது.

தமிழர்களின் உணர்வறிந்த தலைவர் வைகோ அவர்கள் மழை நீர் பாதிப்பை அறிந்த நாளிலிருந்தே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளித்து பசியாற்றி வருகிறார். கழக நிர்வாகிகளும், கழக அனைத்து பிரிவினரும் வெவ்வேறு அணியாக பல இடங்களில் நிவாரணத்திலும் அனுதினமும் ஈடுபடுகின்றனர். கட்சி அடையாளம் இல்லாமல் மனித நேயத்துடன் தொண்டாற்றுகிறார்கள்.

வளை குடா நாடுகளில் வாழுகின்ற நாங்களும் எங்கள் உறவுகளின் துன்பத்தில் பங்கெடுக்க அவர்களின் அன்றாட தேவைகளை சிறிதளவாவது பூர்த்தி செய்யும் பொருட்டு எங்களால் ஆன சிறு தொகையை சேகரித்து, தமிழர்களின் வாழ்வுக்காக போராடிக்கொண்டிருக்கும் தமிழின முதல்வர் வைகோ அவர்களின் நேரடி பார்வையில் செயல்படுத்த ₹68000 வழங்கப்பட்டுள்ளது.

தமிழக உறவுகளின் துயரத்தில் பங்கெடுக்க உதவிய ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினர்களான,
1.   மறுமலர்ச்சி மைக்கேல்
10. ஜெயசேகர்
19. முருகேசன்
2.   வேல்முருகன்
11. வரதராஜ்
20. சுப்ரமணியன்
3.   ராஜகோபால்
12. சேதுமாதவன்
21. ஜகுபர் அலி
4.   ராதாகிருஷ்ணன்
13. கண்ணன் ராஜாராம்
22. லோகநாதன்
5.   ராஜகுரு
14. மாயக்கண்ணன்
23. கணேசன் ராஜேந்திரன்
6.   வெங்கட்ராமன்
15. விஜயராகவன்
24. கனகராஜ்
7.   ராஜபாளையம் ஸ்ரீனிவாசன்
16. ராம்குமார்
25. குருசாமி
8.   கலிங்கப்பட்டி சீனிவாசகம்
17. ஆனந்த கிருஷ்ணன்
26. பாரத்
9.   பிரேம் மற்றும் நண்பர்கள்
18. வெங்கடேஷன்
உள்ளிட்ட அனைவருக்கும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment