Monday, December 28, 2015

திராவிட இயக்க நூற்றாண்டு விழா சுடர் ஓட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி!

கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் இருந்து திருப்பூர் பல்லடம் மதிமுக மாநாடு நடைபெற்ற பந்தலுக்கு  324 கி.மீ தூரம் திராவிட இயக்க நூற்றாண்டு சுடரை ஏந்தி சுடர் ஓட்ட வீரர்கள் ஓடி வந்தனர். 
 
அந்த வீரர்களுக்கு, தலைவர் வைகோ அவர்களின் பொற்கரங்களினால் 03.01.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30 மணி அளவில் திருச்சி கஜப்பிரியா ஹோட்டலில் வைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 
 
சுடர் ஓட்டத்தில் கலந்து கொண்ட பயண வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தலைவர் வைகோ அவர்களின் கரங்களினால் பாராட்டு சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு - நிகழ்ச்சி நடைபெறுகிற அன்று காலை 7.30 மணிக்கெல்லாம் சுடர்பயண வீரர்கள் அனைவரும் வந்துவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு:
மணவை தமிழ்மாணிக்கம்
துணை செயலாளர்-மாணவரணி
அலைபேசி - 9943603331

சசிகுமார்
அமைப்பாளர்-மாநில மாணவர் மன்றம்
அலைபேசி - 9942671930
 
ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment