Saturday, December 12, 2015

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீதாராம் யெச்சூரி, வைகோ, இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் நிவாரண உதவி வழங்குகிறார்கள்!

நாளை 13.12.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் அமைந்தகரை பொன்னுசாமி பிள்ளை தோட்டம் (பீ.பீ.கார்டன்) ஸ்கைவாக் எதிரில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஈடுபடுகிறார்கள்.

மதியம் 4 மணி அளவில் ஆயிரம்விளக்குப் பகுதி, 113 ஆவது வட்டம், (ஜெர்மன் ஹால் அருகில்) பிரகாசம் தெரு, கங்கைகரைபுரம், (சிங் கோயில்) ப்குதிகளில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறுமலர்ச்சி தி.மு.க.பொதுசசெயலாளர் வைகோ,, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார பொருட்கள் வழங்குகிறார்கள். கழக தோழர்கள் ஒத்துழைப்பு வழங்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுகொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment