Tuesday, July 28, 2015

நாளை வட சென்னை கழக செயல்வீரகள் கூட்டம் - ஜீவன் அழைப்பு!

நாளை 29-07-2015 புதன்கிழமை மாலை 5 மணி அளவில், மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் வட சென்னை மாவட்ட கழக அவைத்தலைவர் சிவ.இராஜேந்திரன் தலைமையில் வட சென்னை மாவட்ட மதிமுக கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வடசென்னை மாவட்ட கழக த்டில் உள்ள மாநில அணிகளின் செயலாளர்கள், துணை செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், மாவட்ட, பகுதி கழகங்களின் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, கழக ஆதரவாளர்களையும் உடன் அழைத்து வருமாறு வட சென்னை மாவட்ட செயலாளர் சு.ஜீவன் கேட்டுக்கொள்கிறார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment