Tuesday, July 28, 2015

பொள்ளாச்சி நகர ஒன்றிய மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!

26.7.2015 அன்று மாலை 4மணியளவில் பொள்ளாச்சியில் நகர ஒன்றிய மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநில இளைஞர் அணி செயலாளர். வே.ஈஸ்வரன் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி எஸ்.கோபால்சாமி வரவேற்புரை வழங்கினார். கோவை மாவட்ட செயலாளர் குகன்மில் ஆ.செந்தில்குமார் அவர்கள் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் டாக்டர்.ஏ.கே.வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் ஜி.பங்காருசாமி, சி.கோவிந்தராஜன், வழக்கறிஞர் மா.பாக்கியம், ஆ.திருமலைசாமி, கா.தர்மராஜ், அ.ஆண்டமுத்து, எஸ்,கல்யாணி, எம்.ஏ.வி.துரைபாய் சிங்கை, சக்தி உள்ளிட்ட ஒன்றிய மற்றும் நகர, செயலாளர்கள், மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக, நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் என பெரும் திரளாக கலந்துகொண்டனர். 

செப்டம்பர்-15 திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா மாநாடு குறித்து சுவர் விளம்பரம் செய்தல், மாநாட்டுக்கு பொள்ளாச்சி நகர ஒன்றிய கழகத்தின் சார்பாக 1000 வாகனங்களில் கலந்து கொள்வது எனவும் ஆகஸ்ட் 8,9 ஆகிய இரண்டு நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறுகின்ற கருத்துபட்டறையில் அதிகமான இளைஞர்களை கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. இக்கூட்டத்தின் முடிவில் நகரமன்ற உறுப்பினர் மறுமலர்ச்சி முரளி நன்றி கூறினார்.

மதிமுக இணையதள அணி – ஓமன்

No comments:

Post a Comment