Sunday, July 19, 2015

உயிர் நண்பரின் பிறந்த நாளை கொண்டாட ஈரோடு வந்தார் வைகோ!

உலகப் புகழ் பெற்ற ENT மருத்துவர் சென்னை திருவல்லிகேணி கே.கே.இராமலிங்கம் அவர்களின் 80 ஆண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி ஈரோட்டில் உள்ள பாசூர் அருகே நடைபெறுகிறது. இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுசெயலாளர், தமிழின முதல்வர் வைகோ அவர்கள் இன்று காலை ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்தார். அவருடன் அவரது துணைவியார் ரேணுகாதேவி அம்மையாரும் வந்திருந்தார்.

மருத்துவர் கே.கே.இராமலிங்கம் அவர்கள் தலைவர் வைகோ அவர்களின் உயிர் நண்பர் அவர். மேலும் ப.சிதம்பரம் அவர்களின் சகலை ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment