Tuesday, July 21, 2015

இந்திய பிரதமரை சந்திக்கிறார், தமிழின முதல்வர் வைகோ!

தமிழின முதல்வர், மதிமுக பொதுசெயலாளர், தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை நிலை நாட்டும் காவலன், தலைவர் வைகோ அவர்கள், நம் திருநாடாம், இந்திய பெருநாட்டின் பிரதம அமைச்சர் நரேந்திர மோடி அவர்களை நண்பகல் 12.30 மணிக்கு சந்தித்து பேசவுள்ளார்.

அப்போது ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளையும் விசாரணைக்கு வருகிறது. இதனால் பிரதமரிடமும், 3 தமிழர்களின் வழக்கறிஞரும், இந்தியாவின் முதன்மை வழக்கறிஞர்களில் ஒருவருமான ராம் ஜெத்மலானியையும் சந்தித்து 3 தமிழர்களோடு சேர்த்து 7 தமிழர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்பார் என இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment