Tuesday, July 21, 2015

மாமனிதர் என தலைவர் வைகோவை புகழ் பாடிய ஜீவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

தனது மகன் திருமண விழாவில், அதன் அழைப்பிதழில் ஆலமரத்தை பதிவிட்டு தலைவரோடு ஒப்பிட்டிருந்தார். ஆலமரம் குளிர் காலத்தில் வெப்பத்தையும், வெயில் காலத்தில் குளிரையும் தருகிறது. அந்த பெரிய ஆலமரத்தை போலதான தலைவர் வைகோ அவர்களும் மாமனிதர் என்று கூறி, அதே போலதான் தலைவர் நம்மையும், கழகத்தையும் காக்கிறார் எனவும் கூறினார்.

அவர்தான் மதிமுக தொண்டர் படையின் தலைமை தளபதியும், வடசென்னை மாவட்ட செயலாளரும், தலைவரின் நம்பிக்கைக்குரிய தளபதியுமான எங்கள் அன்பு அண்ணன் சு.ஜீவன் ( Jeevan Subramani) அவர்கள். அவர்களுக்கு ஓமன் இணையதள அணி சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, பல்லாண்டுகால வாழ்ந்து கழகத்தினை இன்னும் மேன்மையடைய செய்ய வாழ்த்துகிறோம். 

மேலும், ஜீவன் அவர்களை மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் அவர்கள் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி – ஓமன்

No comments:

Post a Comment