Tuesday, July 14, 2015

மாணவரணி மாணவர் மன்றம் திருப்பூரில் வைகோவுடன் சங்கமம்!

மறுமலர்ச்சி வேங்கைகளே!

திருப்பூர் மாநகரிலே நடைபெறுகின்ற மாநில அளவிலான மறுமலர்ச்சி திமு கழகத்தின் மாணவரணி மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் கலந்தாய்வு கூட்டமானது பல்லடம் சாலையில் அமைந்திருக்கின்ற இராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் 14-07-2015 செவ்வாய் பிறபகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. 

கழக பொதுசெயலாளர் தலைவர் மற்றும் கழக அவைதலைவர் துரைசாமி அவர்களும் சிறப்பு கருத்துரை வழங்குகிறார்கள்.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில், வருகிற 15 செப்டம்பர் 2015 அண்ணா பிறந்த நாள் மாநாடு பற்றியும், தலைவர் வைகோ அவர்கள் கடந்த உயர்நிலை குழு கூட்டத்தில் அறிவித்த திராவிட பயிர்ச்சி பட்டறைகள் பற்றியும், மறுமலர்ச்சி மாணவர் மன்றங்கள் அமைத்தல் மற்றும் இரத மாணவர் அணி செயல் திட்டங்கள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

எனவே கழகத்தின் கண்மணிகளான நீங்கள் சீருடையுடன் தவறாமல் பங்கேற்று தலைவரின் அறிவுரைகளை உள்வாங்கி வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம் அமைத்து வெற்றி நடை போடவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ஓமன் இணையதள அணி சார்பில் வாழ்த்துகிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment