Wednesday, July 8, 2015

என் பங்கிற்கு 6 வாக்குகள் செலுத்தியிருக்கிறேன்! உங்கள் பங்களிப்பு?

நண்பர்களே!

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை. 

வாக்கு செலுத்த இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் 7.5 லட்சம் வாக்குகளை மட்டுமே நாம் செலுத்தியிருக்கிறோம். எனவே இன்னும் 3 லட்சத்திற்கு மேலான வாக்குகள் தேவை.  

உலகில் 12 கோடிக்கு மேல் வாழும் தமிழ் மக்களில் குறைந்தது 2 கோடிக்கு மேலான மக்கள் இணையதளத்தை உபயோகிக்கின்றனர். ஆனால் மொத்தம் பத்து லட்சம் வாக்குகள் என்ற இலக்கை எட்டுவதற்கே நாம் சிரமப் பட்டு கொண்டிருக்கிறோம்.

என்னுடைய பங்காக நான் எனது அலுவலகத்தில் 6 தோழமைகளிடத்தில் வாக்களிக்க வைத்துவிட்டேன். நீங்களும் அதே போல பணிபுரியும் இடங்களில் உள்ள நிறுவனங்களில் ந்ண்பர்களிடம் வாக்களிக்க ஊக்குவியுங்கள். 

கீழ்காணும் வலைதளத்தில் சென்று வாக்களிக்கலாம். www.tgte-icc.org

தமிழருக்கென ஒரு தாயகம் "தமிழீழம்" உருவாக ஒரு காரணமாயிருப்போம்.

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment