Thursday, July 2, 2015

கருமத்தம்பட்டி பேரூராட்சி அத்துமீறலை கண்டித்து மதிமுக மாபெரும் தர்ணா!

கோவைமாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சோமனூர-கரவளிமாதப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடிகால் வாய்க்காலை தன் சுயலாபத்திற்காக ஆக்கிரமித்து, சாலை போட்டு, அதன் மூலம் தான் போட்ட வீட்டுமனைகளை விற்க திட்டம் தீட்டியுள்ள கருமத்தம்பட்டி பேரூராட்சியை கண்டித்து சமூக ஆர்வலர்களின் மாபெரும் தர்ணா!!!

சோமனூர்-மாதப்பூர் பஞ்சாயத்து இராமாச்சியம் பாளையம் வாய்க்கால் அருகே 3.07.15 நாளை காலை10 மணி அளவில் தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது. 

இந்த அறப்போராட்டத்தை மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் வைகோவின் வலது கரம் அண்ணன் திரு.வே.ஈஸ்வரன் அவர்கள் தலைமை தாங்குகிறார். ம.தி.மு.க மாநில பொது குழு உறுப்பினர் ஏ.கே.தங்கவேலு முன்னிலை வகிக்கிறார். 

ம.தி.மு.க சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சு.ஆனந்த குமார் அவர்கள், மற்றும் தா.மா.க மாநில பொது குழு உறுப்பினர் எஸ்.கே.பாலகுமார், சமூக ஆர்வலர் தம்பி.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு முக்கிய பங்காற்றுகின்றனர்.


எனவே நீதியை நிலைநாட்ட, வாய்க்கால் ஓரம் குடியிருக்கும் அப்பாவி மக்களை காத்திட... கழகத்தின் கண்மணிகளே, பொதுமக்களே!!! அனைவரும் வாரீர்!!! ஆதரவு தாரீர். 


மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment